முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி கூட்டம்: நிர்வாகிகள் வராததால் சோனியா அதிருப்தி

சனிக்கிழமை, 26 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை 27 - டெல்லியில் சோனியா காந்தி கூட்டத்தில் நிர்வாகிகள் கலந்து கொள்ளாததால் பாதியில் வெளியேறினார்.

டெல்லியில் காங்கிரஸ் பாராளுமன்ற குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இது பற்றி உயர்மட்ட குழு நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்கள் முன்னாள் மத்திய மந்திரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்டபடி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தார். அவர் வந்த போது கூட்டத்தில் யாரும் இல்லை. கட்சி நிர்வாகிகள், மூத்த தலைவர்கள் ஒருவரும் அங்கு இல்லாமல் கூட்ட அரங்கு வெறிச்சோடி கிடந்தது. சோனியா வந்திருப்பது யாருக்கும் தெரியவில்லை. இதனால் சோனியா அதிருப்தி அடைந்தார். சிறிது நேரம் அங்கிருந்து அவர் காலை 10 மணியளவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேச வேண்டியிருப்பதால் சோனியா மேலும் காத்திருக்காமல் பாதியிலேயே வெளியேறி விட்டார்.

அதன்பிறகு பல மணி நேரம் கழித்து காங்கிரஸ் நிர்வாகிகள் ஒவ்வொருவராக வர தொடங்கினார்கள். உயர்மட்ட குழு கூடும் நேரத்தை சரியான முறையில் தெரிவிக்கவில்லை என்று காங்கிரஸ் அலுவலக ஊழியர்கள் மீது குற்றம் சாட்டினார்கள். ஆட்சியில் இருக்கும் போது எப்போதும் கட்சி அலுவலகம் வந்து சென்ற தலைவர்கள் சோனியா பின்னால் சென்ற தலைவர்கள் ஆட்சி அதிகாரம் போய் விட்டதால் கூட்டத்தில் கலந்து கொள்ள ஆர்வம் கூட இல்லாமல் உள்ளதையே இது காட்டுகிறது என்று கட்சி நிர்வாகி ஒருவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்