முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு வெண்கலம்: சந்திரகாந்த் மாலி வென்றார்

புதன்கிழமை, 30 ஜூலை 2014      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூலை-31 - காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பளு தூக்குதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கல பதக்கம் கிடைத்தது.

ஆண்களுக்கான 94 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் சந்திரகாந்த் மாலி வெண்கல பதக்கத்தை தட்டி சென்றார். அவர் ஸ்னாட்ச் பிரிவில் 150 கிலோ கிளீன் அண்ட் ஜாக் பிரிவில் 188 கிலோ என மொத்தம் 338 கிலோ தூக்கினார். தங்கப்பதக்கத்தை பப்புவா நியு கினியா நாடு வென்றது. அந்த நாட்டு வீரர் ஸ்டீவன் காரி மொத்தம் 349 கிலோ தூக்கி தங்கத்தை கைப்பற்றினார். அவர் ஸ்னாட்ச் பிரிவில் 149 கிலோவும், கிளின் அண்ட் ஜாக் பிரிவில் 200 கிலோவும் தூக்கினார். ஆஸ்திரேலிய வீரர் ரிபோ வெள்ளி பதக்கம் வென்றார். ஸ்குவாஷ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் சவுரவ் கோஷல், இங்கிலாந்து வீரர் பார்கர் மோதினர். இதில் சவுரவ் 5-11, 11-8 5-11, 6-11 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெண்கல பதக்கத்தை தவற விட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்