முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஞ்சியில் மத்திய மந்திரிக்கு எதிராக கறுப்புக்கொடி

சனிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

ராஞ்சி, ஆக 24:

பிரதமர் நரேந்திர மோடி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் ஜார்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த்சோரன் பேசினார். அவர் பேசும் போதுன, கூட்டத்தில் இருந்த ஒரு பகுதியினர் மோடி வாழ்க என்ற கோஷங்களை எழுப்பி அவரை பேச விடாமல் கிண்டல் செய்து தடுத்தனர். அவர் பேசி முடிக்கும் வரை கோஷம் நீடித்ததால் சோரன் அதிருப்தி அடைந்தார். இதற்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஹேமந்த்சோரன் வலியுறுத்தினார். மேலும் தங்கள் மாநிலத்துக்கு வரும் மத்திய மந்திரிகளுக்கு எதிராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா போராட்டம் நடத்தும் என்றும் எச்சரித்து இருந்தார். இந்த நிலையில் ராஞ்சியில் நேற்று மத்திய மந்திரிக்கு எதிராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தொண்டர்கள் கறுப்பு கொடி காட்டினார்கள். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை மத்திய மந்திரியான நரேந்திரசிங் தோமர் நேற்று காலை ராஞ்சி வந்த போது விமான நிலையத்தில் அவருக்கு எதிராக கறுப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பதிலுக்கு பாஜ தொண்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு கட்சி தொண்டர்கள் இடையே லேசான மோதல் ஏற்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்