முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவதூறு வழக்கு: சுப்ரமணியன் சுவாமிக்கு மீண்டும் சம்மன்

புதன்கிழமை, 17 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.18 – தமிழக அரசு தொடர்ந்த 3வது அவதூறு வழக்கில் பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

தமிழக அரசு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவதூறு கருத்து பரப்பியதாக தமிழக அரசு நேற்றுமுன்தினம் 3வது அவதூறு வழக்கை பதிவு செய்தது.சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், மாநகர அரசு வழக்கறிஞர் ஜெகன் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

பாரதீய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகி சுப்பிரமணியசாமி, தனது டூவிட்டர் இணையதள பக்கத்தில், ‘திலீபன் நினைவு நாளை கொண்டாட தமிழக அரசு அனுமதி வழங்குகிறது’ என்று குறிப்பிட்டு சில அவதூறு கருத்துக்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக குறிப்பிட்டுள்ளார்.

இதனால், பொதுமக்கள் மத்தியில் ஜெயலலிதாவுக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, சுப்பிரமணியசாமி மீது அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது..இந்த மனு நேற்று மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி .ஆதிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது நேரில்

மனு மீதான விசாரணைக்குவரும் அக்டோபர் மாதம் 30ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது..

ஏற்கனவே, சுப்பிரமணிய சாமி மீது தமிழக முதல் அமைச்சர் சார்பில் இரண்டு அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப் பட்டுள்ளது.ஏற்கனவே தாக்கல் செய்த 2 அவதூறு வழக்குகளிலும் அக்டோபர் 30ம் தேதி ஆஜராக சுப்ரமணியன் சுவாமிக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்