முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீட்புப் பணிகள்: காஷ்மீர் அரசுக்கு உச்ச நீதிமன்றம் பாராட்டு

வியாழக்கிழமை, 18 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,செப்.19 - வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்பதிலும், மீட்கப்பட்ட மக்களுக்கு நிவாரண முகாம் வசதிகள் மற்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

அதேவேளையில், மீட்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் தேவையான மருத்துவ சேவைகள் கிடைக்கப்பெறுவதை, அம்மாநில சுகாதார செயலருடன் ஆலோசித்து உறுதி செய்யுமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் 250-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்