முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர சபாநாயகர் மகன் மீது வழக்கு

வெள்ளிக்கிழமை, 19 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

நகரி, செப் 20 - ஆந்திர மாநில சட்டசபை சபாநாயகராக இருப்பவர் கோடெல்ல சிவபிரசாத்ராவ். தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்தவர். இவரது மகன் சிவராமகிருஷ்ணா. டாக்டரான இவருக்கு பத்மபிரியா என்ற மனைவியும், கவுதம் என்ற 4 வயதில் மகனும் உள்ளனர். கணவன், மனைவி இடையேயான கருத்து வேறுபாட்டால் பத்மபிரியா கணவரை பிரிந்து விஜயவாடாவில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார். குழந்தை கவுதம் தாயின் பராமரிப்பில் இருந்தான். இந்த நிலையில் பத்மபிரியா தனது கணவர் மீது விசாகப்பட்டினம் 3வது போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் நான் கணவரை பிரிந்து ஒரு வருடமாக விஜயவாடாவில் உள்ள தாய் வீட்டில் இருக்கிறேன். எனது குழந்தையும் என்னுடன் உள்ளது. எனது மாமனார் சிவபிரசாத்ராவ் சபாநாயகரானதில் இருந்து எனக்கு, என் கணவர் மூலம் மிரட்டல்கள் அதிகரித்தது. இந்த நிலையில் கடந்த புதனன்று இரவு எனது கணவர் சில அடியாட்களுடன் வந்து எனது தாயை தாக்கி குழந்தை கவுதமை கடத்தி சென்று வி்ட்டார். அவனை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது பற்றி விசாரணை நடத்தி வருவதாக விசாகப்பட்டினம் கிழக்கு மண்டல உதவி கமிஷனர் மகேஷ் தெரிவித்தார். மகன் கடத்தப்பட்டது குறித்து பத்மாவதி கூறியதாவது,

எனது கணவர் சிவராமகிருஷ்ணனா தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு 2009ம் ஆண்டு என்னை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆனதில் இருந்தே எனது மாமனார், மாமியார், கணவர் என்னை கொடுமைப்படுத்தி வந்தனர். என்னை மனுஷியாகவே மதிக்கவில்லை. என் கணவரும் சைக்கோ போல நடந்து சித்ரவதை செய்தார். இதனால் 2013ல் எனது கணவரை பிரிந்து விசாகப்பட்டினத்தில் உள்ள எனது தாய் வீட்டில் தங்கி இருக்கிறேன். எனது மாமனார் மீண்டும் எம்.எல்.ஏ ஆனதில் இருந்தே எனக்கு மிரட்டல்கள் வந்தது. நீ வேண்டாம். குழந்தை மட்டும் எங்களுக்கு போதும் என்று கூறி வந்தார். அடிக்கடி குழந்தையை கேட்டு மிரட்டினார். நான் நினைத்தது போலவே கடந்த புதன் கிழமை எனது கணவர் 10 அடியாட்களுடன் வந்து எனது பெற்றோரை தாக்கி தூங்கி கொண்டிருந்த என் குழந்தையை கடத்தி சென்று விட்டார். குழந்தையை காக்க நான் இறுதி வரை போராடுவேன். இது தொடர்பாக முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்கவும் முடிவு செய்து உள்ளேன். இவ்வாறு பத்மாவதி கண்ணீர் மல்க கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்