முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்கள் பிரச்சினையில் விரைவில் நல்ல தீர்வு: இல.கணேசன்

ஞாயிற்றுக்கிழமை, 21 செப்டம்பர் 2014      அரசியல்
Image Unavailable

 

சென்னை, செப். 22 – பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

இலங்கை பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்த ஐவர் குழுவில் நானும் உண்டு. தமிழர்கள் நலனை கருத்தில் கொண்டு நல்ல தீர்வு ஏற்பட தேவையான நடவடிக்கைகளை மோடி எடுத்து வருகிறார். நிச்சயம் நல்ல தீர்வு ஏற்படும்.

தமிழக மீனவர்கள் பிரச்சினையை பொறுத்த வரை அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

நடந்து முடிந்துள்ள உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலில் வாக்குப் பதிவு சதவீதம் மிகவும் குறைந்துள்ளது. இது ஆளுங்கட்சி நடத்தும் உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தல் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதையே காட்டுகிறது.

தேர்தலுக்கு முன்பாகவே தேர்தல் களத்தில் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் இல்லாத வகையில் களம் காணும் போக்கு ஆரோக்கியமான தல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்