முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயிருக்கு ஆபத்து: போலீஸ் பாதுகாப்பு கேட்டு ரோஜா மனு

புதன்கிழமை, 24 செப்டம்பர் 2014      சினிமா
Image Unavailable

 

சித்தூர், செப்.25 - எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கலெக்டரிடம் நடிகை ரோஜா மனு கொடுத்துள்ளார்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட கலெக்டர் சித்தார்த் ஜெயினிடம் நடிகை ரோஜா ஒரு மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:

நான் நகரி தொகுதியின் எம்எல்ஏவாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டேன். எனது தொகுதியை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் முத்துகிருஷ்ணநாயுடு, செங்காரெட்டி ஆகியோர் என்னை பணி செய்ய விடாமல் தடுக்கிறார்கள். சமீபத்தில் நடந்த கெங்கையம்மன் கோயில் திருவிழாவில் கலந்து கொண்டேன். அதற்கு முன்னதாக, எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று நகரி டிஎஸ்பி, சித்தூர் எஸ்பிக்கு ஆன்லைன் மூலமாக புகார் தெரிவித்து இருந்தேன்.

ஆனால், எனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. இதனால், திருவிழாவின் போது என் மீது தெலுங்குதேசம் கட்சியினர் கடும் தாக்குதல் நடத்தினர். என்னை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். நான் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நகரி டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், எனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்