எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அக். 22 – தீபாவளி பண்டிகைக்காக கோயம்பேட்டில் இருந்து தினமும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
ஜெயலலிதா வழிகாட்டுதலின் பேரில் கடந்த 3 ஆண்டுகளாக அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் சிறப்பு பஸ்கள் விடப்பட்டது போல் இந்த ஆண்டும் சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளதால் பொது மக்கள் சிரமமின்றி பயணம் செய்ய வழிவகை செய்துள்ளனர்.
கடந்த 17–ந் தேதியில் இருந்து 20–ந் தேதி வரை மொத்தம் 3101 சிறப்பு பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டுள்ளது.
இதே போல் சென்னையை தவிர்த்து மாநிலத்தின் எஞ்சிய மாவட்டங்களில் இருந்து 17–ந் தேதியில் இருந்து 20–ந் தேதி வரை 3034 பஸ்கள் விடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து 1400 பஸ்களுக்கும் அதிகமாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால் பொது மக்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது.
நாளை தீபாவளி என்பதால் அதிகம் பேர் சொந்த ஊர் செல்வதை கருத்தில் கொண்டு இன்று கோயம்பேட்டில் இருந்து 1652 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் இருந்தும் 1301 சிறப்பு பஸ்கள் செல்கின்றன.
இதற்காக விரிவான ஏற்பாடுகளை போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோயம் பேட்டில் முகாமிட்டு மேற்பார்வையிட்டு வருகிறார். கோயம்பேட்டில் அவருடன் போக்குவரத்து மேலாண்மை இயக்குனர்கள், பொது மேலாளர்கள், ஊழியர்கள் என 400 பேர் முகாமிட்டு பயணிகளுக்கு உதவி வருகின்றனர்.
போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று மதியம் 2 மணியில் இருந்து நேற்று காலை 8 மணி வரை விடிய விடிய கோயம்பேட்டிலேயே முகாமிட்டு பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்த வண்ணம் இருந்தார்.
முன்பதிவு செய்த பயணிகளுக்கு எந்தெந்த பிளாட்பாரத்தில் எந்தெந்த பஸ்கள் புறப்பட உள்ளது என்ற விவரத்தையும், முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு எந்தெந்த பிளாட் பாரங்களில் பஸ்கள் உள்ளது என்ற விவரத்தை பட்டியலிட்டு மக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். ஒலிபெருக்கியிலும் அறிவிப்பு செய்கின்றனர். 16 சர்க்கியூட் காமிரா மூலம் கண்காணித்து வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவிக்க செய்து பயணிகளுக்கு உதவுகின்றனர்.
முன்பதிவு செய்யாத பயணிகள் கடைசி நேரத்தில் அங்கும் இங்கும் பஸ்களை பிடிக்க அலைவது வழக்கம். ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் டோக்கன் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியதற்கு பொது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த டோக்கனில் எந்த பஸ், எந்த ஊர், பஸ் எண், புறப்படும் நேரம் இருக்கை எண் உள்பட அனைத்து விவரங்களும் குறித்து கொடுக்கப்படுகிறது.
எனவே குறிப்பிட்ட பஸ் வந்ததும் துண்டு போட்டு சீட் பிடிக்காமல் சிரமமின்றி மக்கள் ஏறி அமருகின்றனர்.
பஸ் வசதிகள் குறித்து அங்கு வந்த பயணிகள் கூறியதாவது:–
கமலா (அயனாவரம்):– நான் சேலம் செல்வதற்காக வந்துள்ளேன். நேற்று மழையாக இருந்ததால் இன்று வந்தேன். முன்பதிவு செய்யாததால் எப்படி பஸ் பிடித்து போக போகிறோம் என்று பயந்தேன்.
ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக இங்கு வசதிகள் உள்ளது. பஸ் டோக்கன் கொடுத்து இருக்கை எண்ணையும் எழுதி அனுப்பி சீட்டில் உட்கார வைக்கிறார்கள். மிகச் சிறப்பாக மக்களுக்கு வசதிகள் செய்து தந்துள்ளனர். இது மிகவும் பாராட்டத்தக்கது.
ரமேஷ் (பெசன்ட்நகர்):– நான் சென்னையில் இருந்து கோவை செல்ல வந்தேன். மழையாக இருந்ததால் ஆன்லைனில் ‘புக்’ செய்யவில்லை. கோயம்பேட்டில் பஸ் பிடித்து செல்ல வந்தேன். இங்கிருந்த போக்குவரத்து ஊழியர்கள் எங்களுக்கு வழி காட்டினார்கள். டோக்கன் வழங்கி பஸ் நிற்கும் இடத்தையும் சொல்லி இருக்கையிலும் உட்கார வைக்கின்றனர். எந்த சிரமமும் எங்களுக்கு இல்லை. ஏற்பாடுகள் மிக சிறப்பாக உள்ளது என்றார்.
முன்பதிவு செய்யாத பயணிகளுக்கான பஸ்கள் 7, 8, 9 ஆகிய 3 பிளாட்பாரங் களிலும் 1 மற்றும் 2–வது பிளாட்பாரங்களில் 200 கிலோ மீட்டருக்கு குறைவான ஊர்களுக்கு செல்லும் பஸ்களும் 3, 4, 5, 6 பிளாட்பாரத்தில் ரிசர்வ் செய்த பயணிகளுக்காகவும் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
எப்போது சென்றாலும் பஸ்சில் இருக்கை கிடைப்பதால் கோயம்பேடுக்கு பொது மக்கள் வருகை அதிகரித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை23 hours 59 min ago |
ஆனியன்ப்ரை3 days 23 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 23 hours ago |
-
சென்னைக்கு எதிராக மெதுவாக பந்துவீச்சு: குஜராத் கேப்படனுக்கு அபராதம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக குஜராத் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி எதிரொலி: தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
11 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி எதிரொலி: தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
11 May 2024சென்னை, தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம்
11 May 2024புதுடெல்லி : தெற்கு டெல்லியில் நடைபெற்ற ரோடு ஷோவில் கலந்து கொள்ளும் முன் அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம் செய்தார்.
-
இளம்பெண் மரணம் எதிரொலி: கேரளாவில் கோயில்களில் அரளி பூவை பயன்படுத்துவதற்கு தடை
11 May 2024திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் அரளிப்பூவை சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்ததை அடுத்து அந்த மாநிலத்தில் உள்ள கோயில்களில் அரளி பூக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு வரும் 14-ம் தேதி வெளியீடு: அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு
11 May 2024சென்னை, தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் வரும் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
-
பார்லி. தேர்தலில் பா.ஜ.க, வென்றால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்படுவர் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு
11 May 2024புதுடெல்லி : பா.ஜ., வெற்றி பெற்றால், மம்தா பானர்ஜி, ஸ்டாலின், உத்தவ் தாக்கரே, பினராயி விஜயன் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் சிறையில் அடைக்கப்படுவர்'' என டெல்
-
அரசியல் சாசன ரீதியிலான உறவை பேண பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு : சந்திரசேகர ராவ் விளக்கம்
11 May 2024புதுடில்லி : மத்திய அரசுடன் அரசியல் சாசன ரீதியில் உறவை பேண வேண்டும் என்பதற்காக தான் கடந்த காலங்களில் பா.ஜ.,வை ஆதரித்தோம் என பிஆர்எஸ் கட்சி தலைவரும், தெலுங்கானா முன்னாள்
-
டோனியுடன்... ரஷித் கருத்து
11 May 2024ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
-
பத்மஸ்ரீ விருது வென்ற பழங்குடியின பெண்ணின் காலில் விழுந்து வணங்கிய பிரதமர் மோடி
11 May 2024புவனேஷ்வர் : பத்மஸ்ரீ விருது வென்ற பழங்குடியின பெண்ணின் காலில் விழுந்து பிரதமர் மோடி வணங்கிய நிகழ்வு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
-
மாணவர்கள் 16-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: 10-ம் வகுப்பு துணை தேர்வு கால அட்டவணை வெளியீடு : அரசு தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு
11 May 2024சென்னை : தமிழகத்தில் 10-ம் வகுப்பு துணை தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
-
அதிக தனிநபர் சதங்கள்: நடப்பு ஐபிஎல் தொடரில் புதிய சாதனை
11 May 2024மும்பை : நடப்பு ஐபிஎல் தொடரில் 13 தனிநபர் சதங்கள் அடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அதிரடியான ஆட்டம்...
-
ரிஷப் பண்ட் விளையாட தடை
11 May 2024பெங்களுரூ : பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் விளையாட ஐ.பி.எல். நிர்வாகம் தடை விதித்துள்ளது.
-
திடீரென வீசிய புழுதிப்புயல்: டெல்லியில் மரம் முறிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு
11 May 2024டெல்லி : டெல்லியில் வீசிய புழுதிப்புயலின்போது மரம் முறிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்தனர்.
-
சி.எஸ்.கே.வுக்கு எதிரான வெற்றி: புள்ளிப்பட்டியலில் குஜராத் முன்னேற்றம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் 59-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தில் உள்
-
'பிளே ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்குமா சென்னை அணி? - ராஜஸ்தானை இன்று எதிர்கொள்கிறது
11 May 2024சென்னை : ராஜஸ்தானை வீழ்த்தி சி.எஸ்.கே. இன்று 7-வது வெற்றியை பெறுமா?
-
10 மாநிலங்களில் 4-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது: 96 பார்லி. தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு : வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகள் தீவிரம் : ஆந்திரா, தெலங்கானவில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது
11 May 2024புதுடெல்லி : பாராளுன்ற மக்களவைத் தேர்தலுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு நாளை ( மே13) நடைபெறுவதை முன்னிட்டு அனல் பறக்கும் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற