முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாபர் மசூதி வழக்கை தொடர்ந்தவர் காலமானார்

வெள்ளிக்கிழமை, 26 டிசம்பர் 2014      இந்தியா
Image Unavailable

பைசாபாத் - சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள பாபர் மசூதி வழக்கை தொடர்ந்தவர்களில் ஒருவரான முகமது பரூக் காலமானார். அவருக்கு வயது 100.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த முகமது பரூக்கின் தந்தையான முகமது ஜாஹூர்தான் கடந்த 1949ல் பாபர் மசூதியில் ராமர் மற்றும் சீதை விக்ரகங்கள் வைக்கப்பட்டது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார். அவ்வழக்கை தொடர்ந்து நடத்தி வந்த முகமது பரூக் இறந்தார். அவர் முதுமை தொடர்பான உடல்நிலை பாதிப்புகளால் பைசாபாத்தில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
முன்னதாக பாபர் மசூதி நடவடிக்கை குழுவின் தலைவர் ஜபர்யப் ஜிலானி கூறுகையில், பரூக்கின் மகன் முகமது சலீம் இனி தன் தந்தைக்கு பதிலாக இவ்வழக்கில் வசதியாக இருப்பார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து