முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டான்லி ஸ்டெம் செல் ஆராய்ச்சி: மானியம் நீட்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜனவரி 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்று வரும் ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்கு மத்திய அரசு வழங்கி வரும் மானியம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், ஸ்டெம் செல் ஆராய்ச்சி மையம் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு,ஆராய்ச்சிக்கான கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்தியது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) இந்த ஆராய்ச்சி மையத்துக்கான நிதி உதவியை அளித்து வருகிறது.

இந்த நிலையில், மருத்துவமனையில் நடைபெற்று வரும் ஸ்டெம் செல் ஆராய்ச்சியை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் வி.எம்.கடோக், மூத்த துணை இயக்குநர் டாக்டர் விஜயகுமார், விஞ்ஞானி டாக்டர் கீதா ஜோத்வானி ஆகியோர்  சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.  ஆய்வின் முடிவில் அவர் கூறியது:
 
விலங்குகளைக் கொண்டு ஆய்வு செய்யும் ஆய்வுக்கூடம் ஒன்றையும் ஸ்டெம் செல் ஆராய்ச்சி மையத்தின் அருகில் அமைக்க வேண்டும். விலங்குகளைக் கொண்டு மேற்கொள்ளப்படும் ஸ்டெம் செல் ஆராய்ச்சியின் மூலம் கிடைக்கும் நிபுணத்துவம், எதிர்காலத்தில் மனிதர்கள் மீதான ஸ்டெம் செல் ஆய்வுக்கு உதவும் என்றார்.

இதனைத் தொடர்ந்து ஆராய்ச்சிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தால் வழங்கப்படும் மானியம் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து