முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜதராபாத்தில் டி.வி. நடிகை தற்கொலை

ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015      சினிமா
Image Unavailable

நகரி - ஜதராபாத்தில் டிவி நடிகை தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது காதலனிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

தெலுங்கு திரைப்படங்களிலும், டி.வி. தொடரிலும் நடித்து வந்தவர் தீப்தி (31). இவர் ஜதராபாத் பட்டேல் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காதலன் ரமேஷ் குமாருடன் கணவன்-மனைவியாக குடித்தனம் நடத்தி வந்தார். ரமேஷ்குமாரும் திரையுலகில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று காலை நடிகை தீப்தி மர்மமான முறையில் பிணமாக வீட்டில் மின்விசிறியில் தொங்கினார்.

இதை பார்த்த அவரது காதலர் ரமேஷ்குமார் பிணத்தை இறக்கி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சனந்த்நகர் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். தீப்தி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை. அவரது மரணத்தில் மர்மம் இருப்பதை சந்தேகித்த காதலன் ரமேஷ்குமாரிடம் விசாரணை நடத்தினார்கள்.
 
காதலன் ரமேஷ்குமார் கூறும்போது, சம்பவத்தன்று காலை வீட்டிற்கு வந்தேன். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்தேன். தீப்தி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் ஜன்னல் வழியாக சென்று பிணத்தை இறக்கினேன் என்றார். இது குறித்து போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து