முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் செய்ய தயார்

வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - நிலம் கையகப்படுத்தும் சட்டம் விவசாயிகளுக்கு எதிரானதாக இருந்தால் இந்த சட்டத்தில் திருத்தம் செய்ய தயார் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பேசினார். அப்போது கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வர தமது அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். நிலம் கையகப்படுத்தும் சட்டம் குறித்து பேசிய அவர், 120 ஆண்டுகளாக இந்த சட்டத்தில் திருத்தம் செய்யாதது ஏன்? என்று காங்கிரசுக்கு கேள்வி எழுப்பினார்.

காங்கிரசின் தோல்விக்கு இதுதான் காரணம் என்று கூறிய அவர், நிலம் கையகப்படுத்தும் சட்டம் விவசாயிகளுக்கு எதிரானதாக இருந்தால் அதில் திருத்தம் செய்யவும் தயார் என்றும் குறிப்பிட்டார். காங்கிரஸ் அரசின் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை தாம் முடக்கப் போவதில்லை என்று கூறிய அவர், காங்கிரசின் தவறான திட்டம் இது. அதை அவர்கள் நினைத்து பார்க்க வேண்டும் என்பதற்காகவே தான் அதற்கு மூடுவிழா நடத்தப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து