எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர்.அப்போது மருத்துவமனையில் குழந்தைகள் இறப்புக்கு குறை பிரசவம், மூச்சுதிணறல் , குறைவான எடையுடன் பிறந்ததல் போன்றவை காரணம் என்று விளக்கமளித்தனர்.
விழுப்புரம் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்விஜயபாஸ்கர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ஆகியோர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
மக்களின் முதல்வர் ஜெயலலிதா அறிவுரைப்படி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை செயலாளர் டாக்டர். ஜெ. இராதாகிருஷ்ணன், ஆகியோர் நேற்று விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு செய்தனர். மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலுடன் செயல்படும் தமிழ்நாடு அரசு மருத்துவ சேவையில் மிகச் சிறப்பாகச் செயல்படும் முதன்மை மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் தரமான மருத்துவ சேவை வழங்குவதை உறுதி செய்ய அரசு தொடர்ந்து பாடுபட்டுவருகிறது. தமிழகத்தில் சுகாதாரம் மற்றும் தாடீநு சேடீநு நலனில் அரசு மருத்துவ நிலையங்களின் பங்கு மிகவும் சிறப்பாக இருப்பதன் காரணமாகத் தான், நாளொன்றுக்கு 1,800க்கும் மேற்பட்ட பிரசவங்கள் அரசு மருத்துவ நிலையங்களில் நடைபெறுகின்றன. ஆண்டொன்றுக்கு சுமார் 6.8 லட்சம் குழந்தைகள் அரசு மருத்துவ நிலையங்களில் பிறக்கின்றன. தமிழகத்தில் 19 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுடன் இணைந்த 43 மருத்துவமனைகள், ஒரு பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை, 30 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 240 வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகள், 1,751 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8,706 துணை சுகாதார நிலையங்கள், 134 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் சிறப்பாக செயல்படும் காரணத்தினால் பொதுமக்கள் தனியார் மருத்துவமனைகளை நாடாமல் அரசு மருத்துவ நிலையங்களில் பிரசவங்கள் பார்ப்பதினால்தான் இந்தியாவிலேயே மிக அதிக விழுக்காடான பிரசவங்கள் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ நிலையங்களில் நடைபெறுகின்றன.
ஏனெனில், பிறக்கின்ற அனைத்து குழந்தைகளையும் மிகச் சிறப்பாக பராமரிக்கக்கூடிய அனைத்து வசதிகளும் அரசு மருத்துவமனைகளில் உள்ளதால் மட்டுமே தான் தாடீநுமார்கள் அரசு மருத்துவமனைகளை அதிக அளவில் நாடுகிறார்கள். அதுமட்டுமின்றி தனியார் 2 மருத்துவமனைகளில் பிரசவம் முடிந்து அவர்களால் காப்பாற்ற முடியாத நிலையில் உள்ள பச்சிளம் குழந்தைகளையும் அரசு தாங்கி பிடித்து காப்பாற்றுகிறது. விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்றும் இன்றும் சில பச்சிளம் குழந்தைகள் இறந்துள்ளன. இந்த இறப்பு அனைத்தும் குறை பிரசவம், குறைவான எடையுடன் பிறந்த குழந்தை மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பல்வேறு இயற்கையான காரணங்களால் தான் நிகழ்ந்துள்ளது. இதில் சிகிச்சை குறைபாடு எதுவும் இல்லை. மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் கீதாலட்சுமி தலைமையில் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையிலிருந்து பச்சிளம் குழந்தை சிறப்பு மருத்துவர்களான டாக்டர் சினுவாசன் மற்றும் டாக்டர் குமுதா ஆகியோர் அடங்கிய ஒரு மருத்துவக் குழு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அங்கு முகாமிட்டு அம்மருத்துவமனையின் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் டாக்டர். பதிவர்தினி அவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு செய்தபோது, இம்மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை பிரிவில் இன்குபேட்டர், வென்டிலேட்டர், ஆக்சிஜன் சிலிண்டர் போன்ற மருத்துவ உபகரணங்கள் போதிய அளவில் இருப்பது கண்டறியப்பட்டது. குழந்தைக்கு ஏற்படும் மூச்சுத் திணறல், முக்கிய உறுப்புகள் முதிர்ச்சியடையாத நிலையில் பிறக்கும் எடை குறைந்த குழந்தைகள், கருப்பையில் வளர்ச்சி குன்றிய குழந்தை போன்ற காரணங்களால் தான் சில குழந்தைகளுக்கு இறப்பு ஏற்படுகிறது என்றும், சிகிச்சையில் எந்த குறைபாடும் இல்லை என்றும், இறந்த குழந்தைகளுக்குகூட வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது என்றும், சிகிச்சை பலனின்றி சில குழந்தைகள் இறந்துவிட்டனர் என்றும், மருத்துவர்கள் மாண்புமிகு அமைச்சரிடம் ஆய்வின்போது தெரிவித்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அனைத்து பச்சிளம் குழந்தைகளுக்கும் தொடர் கண்காணிப்பு மற்றும் சிறப்பு சிகிச்சை தொடர்ந்து அளிக்க வேண்டும் என்று மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மருத்துவர்களை அறிவுறுத்தினர்கள். பின்னர் மருத்துமனையின் பல்வேறு பிரிவுகளை பார்வையிட்டு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா, நோயாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் போதுமான அளவில் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 103 ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிக்கலான பிரசவங்களை கடைசி நேரம் வரை காத்திருக்காமல் உரிய நேரத்தில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பிட மருத்துவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் கூட்டு முயற்சியுடன் கர்ப்பகால பராமரிப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார்கள். கர்ப்ப காலத்தில் எடை குறைவான தாய்மார்களை தீவிரமாக கண்காணித்து அவர்களுக்கு உரிய சிகிச்கை அளிக்கப்பட வேண்டும் என்று இம்மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர்கள், அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2014-15-ஆம் ஆண்டு சுமார் 54,539 பிரசவங்கள் நிகந்துள்ளன. இதில் அரசு மருத்துவ நிலையங்களில் மட்டும் சுமார் 47,572 பிரசவங்கள் நிகழ்ந்துள்ளன. மாவட்டத்திலுள்ள 103 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் உயர் சிகிச்சைக்காக விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவிற்கு அனுமதிக்கப்படுகின்றனர். பச்சிளம் குழந்தைகளை தாயுள்ளத்தோடு பராமரித்து பாதுகாக்கும் மக்களின் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலோடு செயல்படும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தாயின் பரிவோடு சேவையை தொடர்ந்து செயலாற்றி வருகிறது.
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் , மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர். இந்த ஆய்வின் போது மருத்துவத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
05 May 2024சென்னை : தமிழகத்தில் நாளை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் 7.50 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு : முடிவுகளை குறுஞ்செய்தியாக அனுப்பவும் ஏற்பாடு
05 May 2024சென்னை : தமிழ்நாட்டில் 7.50 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
காயத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து பதிரனா விலகினார்
05 May 2024சென்னை : காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள பதிரனா தாயகம் திரும்பி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
ஆள் கடத்தல் வழக்கில் கைது: எச்.டி.ரேவண்ணா கோர்ட்டில் ஆஜர்
05 May 2024பெங்களுரூ ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட எச்.டி. ரேவண்ணா நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
நீலகிரி செல்வோர் இ-பாஸ் பெற இணையதளம் அறிவிப்பு
05 May 2024நீலகிரி : நீலகிரி செல்லும் சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ் பெறும் வகையில் அதற்கான இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது.