முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்: டிராபிக் ராமசாமிக்கு ஆதரவு இல்லை - ஜி.கே.மணி

திங்கட்கிழமை, 1 ஜூன் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ள டிராபிக் ராமசாமி பல்வேறு கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணியை சந்தித்து ஆதரவு கேட்டார்.

இந்த சந்திப்பு முடிந்ததும் டிராபிக் ராமசாமியை ஆதரிப்பது பற்றி பா.ம.க. தலைவர் ஜி.கே.மணியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

பெரியவர் டிராபிக் ராமசாமி சமூக ஆர்வலர்,  ஆர்.கே.நகரில் போட்டியிட போவதாகவும் பா.ம.க. ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பா.ம.க. பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டது. அதன் பிறகு எந்த தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிடவில்லை. இடைத்தேர்தலை பொறுத்தவரை எந்த கட்சி அந்த தொகுதியில் வெற்றி பெற்றதோ அந்த கட்சிக்கே விட்டு கொடுத்துவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி வருகிறார்.

இடைத்தேர்தலில் எந்த தொகுதியிலும் போட்டியிடுவதில்லை என்று கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிட போவதில்லை. யாருக்கும் ஆதரவும் இல்லை என்று கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். அதில் எந்த மாற்றமும் இல்லை. எனவே டிராபிக் ராமசாமிக்கு ஆதரவு இல்லை

இவ்வாறு ஜி.கே.மணி கூறினார். .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

வாசகர் கருத்து

1 கருத்துகள்

  1. Anonymous June 5, 00:01

    இவர்களுக்கே டெபொசிட் தேரது. இதில் இவர்கள் ஆதரவை மரியாதைக்காக கேட்டால் தன்னை மறந்து பதில் சொல்லியது வேடிக்கை.

    Reply to this comment
    View all comments

    வாசகர் கருத்து