எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சென்னை நகரின் முக்கிய நீர் ஆதாரமாக கருதப்படும் புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் பருவமழை பொய்ப்பு காரணமாக கோடை காலங்களில் வறண்டு விடுகின்றன. இதனால் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் சென்னை நகரம் குடிநீர் அபாயத்தில் சிக்கித் தவிக்கிறது.கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், நெம்மேலியில் தற்போது இயங்கி வரும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அருகே புதிதாக 150 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.
நெம்மேலி புதிய திட்டத்துக்கு ரூ.1,371 கோடியே 86 லட்சம் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து, அதனை செயல்படுத்த தேவையான நிதி ஆதாரங்களை வழங்கும்படி மத்திய அரசுக்கு, தமிழக அரசு பரிந்துரை கடிதம் அனுப்பியது.மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை, இதனை ஜெர்மன் நாட்டின் அரசு நிதி நிறுவனத்துக்கு அனுப்பி வைத்தது. அதன்பேரில், ஜெர்மன் அரசு நிதி நிறுவன ஆய்வுக் குழுவின் திட்ட மேலாளர் வெரினா வில்லாண்ட், சீனியர் செக்டார் நிபுணர் அனிர்பான் ருண்டு, தொழிற்நுட்ப நிபுணர் கிளாஸ் மெர்டஸ், சோசியல் நிபுணர் ஹெய்டர் அப்பாஸ் ஆகிய 4 பேர் கொண்ட குழுவினர் 4 நாள் பயணமாக கடந்த 6-ந் தேதி சென்னை வந்தனர்.
அவர்கள் கடந்த 7-ந் தேதி, நெம்மேலியில் தற்போது இயங்கி வரும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை பார்வையிட்டு, புதிதாக 150 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தையும் பார்வையிட்டனர்.
இந்தநிலையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் அலுவலகத்தில், மேலாண்மை இயக்குநர் டாக்டர் சந்திரமோகனிடம், ஜெர்மன் குழுவினர் நேற்று காலை நெம்மேலி திட்டம் தொடர்பாக மீண்டும் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் மதியம், சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அரசின் முதன்மை நிதி செயலாளர் சண்முகத்தையும் சந்தித்து பேசினர்.
இதுகுறித்து தமிழக அரசு உயர்அதிகாரி ஒருவர் கூறியதாவது:- நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை அமைப்பதற்கு தேவையான நிதி ஆதாரங்கள் முழுவதையும் வழங்க ஜெர்மன் குழுவினர் இசைவு தெரிவித்துள்ளனர்.இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை தலைமை செயலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மை செயலாளர் பனீந்தர ரெட்டி, தமிழக அரசின் நிதித்துறை முதன்மை செயலாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலையில் இன்று நடக்கிறது.
இதில் இரு நாட்டு அதிகாரிகளும் கையெழுத்திட உள்ளனர். அதன்பின்னர் ஜெர்மன் நாட்டு குழுவினர் தங்கள் 4 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று தங்கள் நாட்டுக்கு திரும்புகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த நிதிகள் ஒதுக்கப்பட்டவுடன் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு, 30 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்றும், இதன் மூலம் மத்தியசென்னை, தென்சென்னையை சேர்ந்த 9 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள் என்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
05 May 2024சென்னை : தமிழகத்தில் நாளை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
தமிழ்நாட்டில் 7.50 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு : முடிவுகளை குறுஞ்செய்தியாக அனுப்பவும் ஏற்பாடு
05 May 2024சென்னை : தமிழ்நாட்டில் 7.50 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
காயத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து பதிரனா விலகினார்
05 May 2024சென்னை : காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள பதிரனா தாயகம் திரும்பி உள்ளார்.
-
ஆள் கடத்தல் வழக்கில் கைது: எச்.டி.ரேவண்ணா கோர்ட்டில் ஆஜர்
05 May 2024பெங்களுரூ ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட எச்.டி. ரேவண்ணா நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
நீலகிரி செல்வோர் இ-பாஸ் பெற இணையதளம் அறிவிப்பு
05 May 2024நீலகிரி : நீலகிரி செல்லும் சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ் பெறும் வகையில் அதற்கான இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜெர்ஸியை வழங்கிய கோலி
05 May 2024ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
-
ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை: போட்டி அட்டவணை வெளியீடு
05 May 2024துபாய் : ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான குழுக்கள் மற்றும் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
வங்காளதேசத்தில்...
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி ஹாட்ரிக் வெற்றி
05 May 2024பெங்களூரு : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 38 பந்துகள் எஞ்சி இருக்க 24 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
-
பஞ்சாப் அணியை வீழ்த்தி பழி தீர்த்த சென்னை அணி : புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்
05 May 2024தர்மசாலா : 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்த்தது சென்னை அணி.