எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டி தமிழகம் முழுவதும் மாநில அம்மா பேரவை சார்பில் 1 லட்சம் தீபவிளக்கேற்றி சிறப்பு பிரார்த்தனை நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு மனமுருக பிரார்த்தனை செய்தனர்.
கூட்டுப்பிரார்த்தனை
முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைந்து வீடுதிரும்ப வேண்டி மாநில அம்மா பேரவையின் சார்பில் தமிழகம் முழுவதும் கோவில்களில் லட்சார்ச்சனை, சர்வ மதத்தினர் பங்கேற்ற மாபெரும் கூட்டுப்பிரார்த்தனை, தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து விஷேச பிரார்த்தனை, முருக பெருமானின் ஆறுபடை வீடுகளில் சிறப்பு யாகத்துடன் சண்முகா அர்ச்சனை, கோபூஜை, கோதானம் மற்றும் முதல்வர் ஜெயலலிதா பிறந்த மகம் நட்சத்திரத்தை முன்னிட்டு. நரசிம்மர், வராஹி அம்மன், பிரத்தியங்கிரா தேவி ஆகிய ஆலயங்களில் வேதவிற்பனர்கள், வேதபாராயணங்கள் முழங்க 108 ஹோம பொருட்களால் பல்வேறு சிறப்பு ஹோமங்கள் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கீழ்திருப்பதியிலிருந்து மேல் திருப்பதி வரை பாதயாத்திரையாக சென்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
1 லட்சம் தீபவிளக்குகள்
இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் உள்ள முருகப்பெருமான் மற்றும் பல்வேறு ஆலயங்களில் நேற்று மாநில அம்மா பேரவை சார்பில் 1 லட்சம் கார்த்திகை தீப விளக்குகள் ஏற்றி விஷேச வழிபாடு மற்றும் விஷேச பிரார்த்தனைகள் நடத்தப்பட்டது. அ.தி.மு.க. அமைப்பு ரீதியில் செயல்பட்டு வரும் 50 மாவட்டங்களில் இந்த சிறப்பு பிரார்த்தனைகள் மாவட்ட அம்மா பேரவை சார்பில் அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்றது. வடசென்னை வடக்கு மாவட்டத்தில் ஆர்.கே.நகர் தொகுதியிலுள்ள அருள்மிகு முருகன் திருக்கோவில், வடசென்னை தெற்கு மாவட்டத்தில் எழும்பூரில் செல்வ விநாயகர் கோவில், தென்சென்னை வடக்கு மாவட்டத்தில் புதுப்பேட்டை பாலமுருகன் கோவில், தென்சென்னை தெற்கு மாவட்டத்தில் வேளச்சேரி மருந்தீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டத்தில் அனகாபுத்தூர் சுப்ரமணியசுவாமி கோவில், காஞ்சிபுரம் மத்திய மாவட்டத்தில் மறைமலை நகர் முருகன் கோவில், காஞ்சிபுரம் மேற்கு மாவட்டத்தில் காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவில், திருவள்ளுவர் மேற்கு மாவட்டத்தில் முருகன் கோவில், திருவள்ளுவர் கிழக்கு மாவட்டத்தில் தட்சிணாமூர்த்தி கோவில், வேலூர்; புறநகர் கிழக்கு மாவட்டத்தில் செல்வவிநாயகர் கோவில், வேலூர் புறநகர் மேற்கு மாவட்டத்தில் ஆம்பூர் ஞானமலை முருகன் கோவில், திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தில் ஆரணி முருகன் கோவில், திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் குறிஞ்சியாபுரம் ஆறுமுக பெருமாள் கோவில், கடலூர்; கிழக்கு மாவட்டத்தில் நெய்வேலி முருகன்; கோவில், கடலூர்; மேற்கு மாவட்டத்தில் மேலகடம்பூர் அமிர்தகணேஷர் கோவில், விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் ராஜகுலம் சுப்பிரமணியக்கோவில்,
ஜெலகண்டேஸ்வரர் கோவில்
விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் பெரியசேவலை முருகன் கோவில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காசிநாயணபள்ளி முருகன் கோவில், தர்மபுரி மாவட்டத்தில் முருகன் கோவில், சேலம் மாநகர் மாவட்டத்தில் அம்மாபேட்டை சுப்பிரமணிய முருகன் கோவில், சேலம் புறநகர் மாவட்டத்தில் ஆத்தூர் கோட்டை முருகன் கோவில், நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு ஆறுமுகசுவாமி கோவில், ஈரோடு மாநகர் மாவட்டத்தில் காசிமலை முருகன் கோவில், ஈரோடு புறநகர் மாவட்டத்தில் தவனகிரி முருகன் கோவில், திருப்பூர் மாநகர் மாவட்டத்தில் அனுப்பூர்பாளையம் ஜெலகண்டேஸ்வரர் கோவில், திருப்பூர் புறநகர் மாவட்டத்தில் மடத்துக்குளம் முருகன் கோவில், கோவை மாநகர் மாவட்டத்தில் மருதமலை முருகன் கோவில், கோவை புறநகர் மாவட்டத்தில் பொள்ளாச்சி முருகன்; கோவில், நீலகிரி மாவட்டத்தில் காத்துகுழி பாலமுருகன் கோவில், திருச்சி மாநகர் மாவட்டத்தில் பாலக்கரை முத்துமாரியம்மன் கோவில், திருச்சி புறநகர் மாவட்டத்தில் மணச்சநல்லூர் முருகன் கோவில், பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பூர் முருகன் கோவில், அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் அருள்மிகு குறைதீர்க்கும் குமரன் கோவில், கரூர் மாவட்டத்தில் பாலமலை பாலசுப்பிரமணிய கோவில், தஞ்சை வடக்குமாவட்டத்தில் முருகன் கோவில், தஞ்சை தெற்கு மாவட்டத்தில் ஒரத்தநாடு காசி விஸ்வநாதர் கோவில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில்,
குன்றக்குடி முருகன் கோவில்
திருவாரூர் மாவட்டத்தில் பரவக்கோட்டை தண்டாயுதபாணி கோவில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பாலதண்டாயுதபாணி கோவில், மதுரை மாநகர் மாவட்டத்தில் செல்லூர் பாலமுருகன் கோவில், மதுரை புறநகர் மாவட்டத்தில் பழமுதிர்ச்சோலை முருகன் கோவில், தேனி மாவட்டத்தில் கம்பம் வேலப்பர் கோவில், திண்டுக்கல் மாவட்டத்தில் குண்ணம்பட்டி சுப்பிரமணியசுவாமி கோவில், விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் சுப்பிரமணியசுவாமி கோவில், சிவகங்கை மாவட்டத்தில் குன்றகுடி முருகன் கோவில், ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் கொடுமலூர் முருகன் கோவில், திருநெல்வேலி மாநகர் மாவட்டத்தில் சாலை குமாரசுவாமி கோவில், திருநெல்வேலி புறநகர் மாவட்டத்தில் வென்னிமலை முருகன் கோவில், தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி முருகன் கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகராஜர் கோவில், ஆகிய இடங்களில் உள்ள திருக்கோவில்களில் இந்த விஷேச பிரார்த்தனைகளும்,வழிபாடுகளும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மாநில அம்மா பேரவை செயலாளரும், வருவாய் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அம்மா பேரவை நிர்வாகிகள் செய்திருந்தனர். இதில் தலைமை கழக நிர்வாகிகள் அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தீபவிளக்கு ஏற்றி முதல்வர் ஜெயலலிதா பூரண உடல் நலம்பெற வேண்டி மனமுருக பிரார்த்தனை செய்தனர்.
பாதயாத்திரை
மதுரை புறநகர் மாவட்ட அம்மா பேரவை சார்பில் அழகர்கோவில் மலை மேல் உள்ள பழமுதிர்சோலை முருகன் கோவிலில் ஓம் என்ற எழுத்து வடிவில் 1008 கார்த்திகை தீபவிளக்குகள் ஏற்றபட்டு சிறப்பு வழிபாடுகளும், பிரார்த்தனைகளும் நடைபெற்றது. முன்னதாக 18ம் படி கருப்புச்சாமி கோவில் இருந்து மாநில அம்மா பேரவை செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் பாதயாத்திரையாக புறப்பட்டு நான்கு கிலோமீட்டா் தூரம் நடந்து சென்று பழமுதிர்சோலையை அடைந்து அங்குள்ள முருகன் பெருமான் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். முதல்வர் ஜெயலலிதா பெயரில் சிறப்பு அர்ச்சனையும், பூஜைகளும் நடத்தப்பட்டன.
1008 தீப விளக்குகள்
இதனை தொடர்ந்து ஓம் என்ற எழுத்து வடிவில் 1008 கார்த்திகை தீப விளக்குகளை மாநிலஅம்மா பேரவை செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், தூத்துக்குடி மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், இந்து அறநிலைத்துறை அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன் , மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா ஆகியோர் 1008 தீபம் ஏற்றி முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய வேண்டி சிறப்பு பூஜை செய்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.தமிழரசன் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.போஸ், பா.நீதிபதி, கே.மாணிக்கம், பெரியபுள்ளான் உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு மனமுருக பிரார்த்தனை செய்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை6 hours 3 min ago |
உருளைக்கிழங்கு பிரெட்4 days 6 hours ago |
மினி பான் கேக்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-05-2024
08 May 2024 -
தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி
08 May 2024ஐதராபாத், தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
126-வது மலர் கண்காட்சி துவக்கம்: நீலகிரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
08 May 2024நீலகிரி, நீலகிரியில் மலர் கண்காட்சி நாளை தொடங்கவுள்ளதை முன்னிட்டு நாளை 10-ம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். ம
-
வேளாண், மீன்வள படிப்புகளில் சேர விண்ணப்பங்களை ஜூன் மாதம் 6-ம் தேதி வரை அனுப்பலாம்
08 May 2024கோவை : வேளாண்மை மற்றும் மீன்வள படிப்புகளில் சேர ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்ச
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : 8 மாவட்டங்களல் இன்று மழை பெய்யும்
08 May 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 8 மா
-
தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
08 May 2024சென்னை : தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல, வேதனை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வேலாயுதன் காலமானார்
08 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க.வின் முதல் எம்.எல்.ஏ. வேலாயுதன் மாரடைப்பு காரணமாக காலமானார்.
-
இஸ்ரேலுக்கு குண்டுகள் அனுப்புவதை 2 வாரத்திற்கு நிறுத்தியது அமெரிக்கா
08 May 2024காசா : ரபா நகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் இஸ்ரேலுக்கு குண்டுகளை அனுப்புவதை அமெரிக்கா 2 வாரத்துக்கு நிறுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம், வழக்கு எப்படி அதிகரிக்கிறது? - அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
08 May 2024மதுரை : கஞ்சா வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலர், தமிழ்நாடு காவல்துறை தலைவர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
நீரவ் மோடியின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி
08 May 2024லண்டன் : நீரவ் மோடியின் ஜாமீன் மனு லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 5-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அமலாக்க துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&
-
ஸ்டிராங் ரூமில் கூடுதல் கேமரா பொருத்துமாறு அறிவுறுத்தல்; சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
08 May 2024சென்னை, வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தேர்
-
அமெரிக்க மாகாண செனட் தேர்தலில் போட்டி: திக நிதி திரட்டிய இந்திய வம்சாவளி இளைஞர்
08 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் சென்ட் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஸ்வின் ராமசாமி என்ற இளைஞர், 2,80,000 டாலர் நிதி திரட்டி உள்ளார
-
ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம்: 2 உயரதிகாரிகள் கைது
08 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம் தீட்டிய விஷயத்தில் உக்ரைனின் 2 பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என சி.என்.என்.
-
அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் துவக்கம்: தமிழ்நாடு தலைமை செயலாளர் தகவல்
08 May 2024சென்னை, அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் தொடங்கும் என தலைம
-
திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் 5 மலர்களை மட்டும் பயன்படுத்த உத்தரவு
08 May 2024திருவனந்தபுரம் : திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் 5 மலர்களை மட்டும் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
-
பிரதமர் மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு
08 May 2024சென்னை : தேர்தல் பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி வரும் பிரதமர் மோடி மீது உடனடி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில்
-
நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
08 May 2024காலஹன்டி, இந்தியாவில் அடுத்த 10-15 ஆண்டுகளில் வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
மும்பை, திருப்பதி, திருச்சிக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவை துவக்கம்
08 May 2024சேலம், மும்பை, திருப்பதி, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவையை தொடங்கவுள்ளதாக ஏர்சபா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
கனமழையால் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் குழந்தை உள்பட 7 பேர் பலி
08 May 2024ஐதராபாத் : கனமழையால் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
-
மோடியின் ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் வளம் கண்டுள்ளன : நிர்மலா சீதாராமன் தகவல்
08 May 2024புதுடெல்லி : தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள அரசின் கீழ் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்கள் சீர்குலைந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியினரும், ராகுல் காந்தியும் சொல்லி வருகின
-
தென் இந்தியர்கள் ஆப்ரிக்கர்கள்; சாம் பிட்ரோடா கருத்து ஏற்க முடியாதது: காங்.,
08 May 2024புதுடில்லி, தென் இந்தியர்கள் ஆப்ரிக்கர்கள் என்று கூறிய சாம் பிட்ரோடா கருத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
-
ஒரே நாளில் மருத்துவ விடுப்பு எடுத்த 300 ஊழியர்கள்: ஏர் இந்தியாவின் 78 விமானங்கள் ரத்து: அவதிக்குள்ளான பயணிகள்
08 May 2024புதுடெல்லி : ஒரே நாளில் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மருத்துவ விடுப்பு எடுத்ததால் ஏர் இந்தியா விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
-
கேரளாவில் நைல் காய்ச்சல் பரவல்: 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
08 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவி வரும் நைல் காய்ச்சலை தொடர்ந்து அங்கு 3 மாவட்டங்களுக்கு மாநில சுகாதாரதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பிரேசிலில் வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு
08 May 2024பிரேசிலியா, பிரேசிலில் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.
-
கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் வழக்கில் சுப்ரீம் கோர்ட் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது
08 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் நாளை (வெள்ளிக்கிமை) உத்தரவு பிறப்பிக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.