முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீர்நாய் கடித்து 5 மாணவ, மாணவிகள் காயம்

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2016      ஈரோடு

சத்தியமங்கலத்தை அடுத்த அரசூர் ஆற்றங்கரையில் நீர்நாய் கடித்ததில் ஒரு மாணவர் உள்பட 5 மாணவிகள் காயமடைந்தனர்.  சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிரியா (14), நந்தினி(14), கலைவாணி (14), காவியா (14) ஆகியோர் 9-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.  அரசூரைச் சேர்ந்த நந்தினியின் இளைய சகோதரர் லோகேஷ் (4). இவர், அதே ஊரில் உள்ள பள்ளியில் முதல் வகுப்பு படித்து வருகிறார். பிரியா, கலைவாணி, காவியா ஆகியோர் அரசூரில் உள்ள நந்தினியின் வீட்டுக்கு வியாழக்கிழமை சென்றுள்ளனர்.  பள்ளித் தோழிகளுடன் நந்தினி அவரது சகோதரர் லோகேஷ் ஆகியோர் அரசூர் பவானி ஆற்றுக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஆற்றில் இருந்த நீர்நாய் கடித்ததில் 5 பேரும் காயமடைந்தனர். ஆற்றங்கரையில் இருந்த பொதுமக்கள் 5 பேரையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து, சத்தியமங்கலம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago