முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோடியக்கரை நடுக்கடலில் நாகையை சேர்ந்த இரு படகுகள் எதிர்பாராதவிதமாக மோதியதில் படகின் இடையே சிக்கிய மீனவர் படுகாயம்

புதன்கிழமை, 28 டிசம்பர் 2016      நாகப்பட்டினம்

வேதாரண்யம் அருகே கோடியக்கரை நடுக்கடலில் அக்கரைப்பேட்டையை சேர்ந்த இரு இழுவைப் படகுகள் எதிர்பாராதவிதமாக மோதியதில் படகுகள் இடையே சிக்கிய மீனவர் படுகாயம் அடைந்தார்

 

நாகை அருகே அக்கரைப்பேட்டைச் சேர்ந்த சிவமணி என்பவருக்கு சொந்;தமான இரு இழுவைப் படகுகள் நேற்று முன் தினம் அதிகாலையில் மீன்பிடிக்க சென்றுள்ளன இதில் ஒவ்வொரு படகிலும் ஏழு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர் நேற்று மதியம் கோடியக்கரை தென்கிழக்கே 15 கிமி தொலைவில் இரண்டு படகுகளும் அருகருகே நிற்கும் போது எதிர்பாராதவிதமாக படகுகள் மோதிக் கொண்;டது இதில் ஒரு படகிலிருந்து மற்றோரு படகிற்கு மீன்பிடி சாதனங்களை மாற்றும் போது அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ராசு மகன் ரவி (50) என்ற மீனவர் இரு படகின் இடையே சிக்கி வலது கால் எலும்பு உடைந்து பலத்த காயமடைந்தார் காயமடைந்த மீனவரை உடனடியாக படகில் கோடியக்கரை கொண்டு வந்து அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் வேதாரண்யம் அரசு மருத்துமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கபட்டு மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் மீனவர் ரவி சேர்க்கப்பட்டுள்ளார் இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் மும்தாஜ்பேகம் மற்றும் கடற்கரை காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்