முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம் 275 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பிற்க்கான பணி ஆணைகள் கலெக்டர் சங்கர் வழங்கினார்

வியாழக்கிழமை, 29 டிசம்பர் 2016      நீலகிரி
Image Unavailable

 

நீலகிரி மாவட்டம் கூடலூர் பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் திட்டம் - தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 275 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பிற்க்கான பணியாணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் பொ.சங்கர் வழங்கினார். கூடலூர் பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் திட்டம் - தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 275 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பிற்க்கான பணியாணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி பேசியதாவது,

 

 

"தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்டம் ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட கோயமுத்தூர், திருப்பூர், சென்னை போன்ற மாவட்டங்களிலுள்ள தொழில் நிறுவனங்களின் மூலம் வேலைவாய்ப்பு முகாம்கள் ஏற்படுத்தி பெருவாரியான இளைஞர்களுக்கு தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி வருகிறது நம் தமிழக அரசு.

 

அதன்படி நீலகிரி மாவட்டத்தில் 2014 - 15 ம் ஆண்டில் 3 கல்லூரிகளில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் 2060 பேர் கலந்து கொண்டு அதில் 615 பேருக்கு பணியாணைகளும், 2015-16ம் ஆண்டில் உதகை அரசு கலைக்கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் 900 பேர் கலந்து கொண்டு அதில் 206 பேருக்கு பணியாணைகளும் வழங்கப்பட்;டன.

 

இந்த நிதியாண்டில் வட்டாரத்திற்கு ஒரு வேலைவாய்ப்பு முகாம் வீதம் 4 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் முதல் கட்டமாக நடத்தப்படும் இம்முகாமில் 1151 இளைஞர்கள் கலந்து கொண்டனர். அதில் 275 பேர் தேர்வாகியுள்ளனர். இம்முகாமில் தேர்வாகாத இளைஞர்கள் இனிவருங்காலங்களில் இதுபோன்று நடத்தப்படும் வேலைவாய்ப்பு முகாம்களை பயன்படுத்தி அவர்களின் வாழ்வில் முன்னேற வாழ்த்துகிறேன். அதுமட்டுமன்றி பணியாணைகளை பெற்ற இளைஞர்கள் அவ்வாய்ப்பினை நன்கு பயன்படுத்தி கடுமையாக உழைத்து அந்நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கும், தங்களுடைய வாழ்வாதார முன்னேற்றத்திற்கும் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்." என்றார்.

 

இம்முகாமில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொ) மாரப்பா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பெ.ரேணுகா தேவி, பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் திரு.எல்.ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்