எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு பயணிகள் செல்ல சென்னையில் 5 இடங்களில் இருந்து சிறப்பு பஸ் சேவை இயக்கம் தொடங்கியது.
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புபவர்களுக்கு தமிழக அரசு சிறப்பு பஸ்களை இயக்குகிறது. சிறப்பு பேருந்துகள் நேற்று (புதன்கிழமை) முதல் 13-ந்தேதி வரை இயக்கப்படுகிறது. வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக 15, 16, 17 ஆகிய நாட்களிலும் சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளது.
சென்னையில் 5 பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் புறப்பட்டு செல்கின்றன. போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பேருந்துகள் செல்ல வசதியாக இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பஸ்களில் செல்லக் கூடியவர்கள் முன்பதிவு செய்து வருகிறார்கள். நேற்று வரை ஒரு லட்சத்து 7 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
இதில் சென்னையில் இருந்து 70 ஆயிரம் பேர் பயணம் செய்கிறார்கள். நேற்று 9 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக முன்பதிவு செய்து இருக்கிறார்கள். பொங்கல் சிறப்பு பஸ் நேற்று முதல் இயக்கப்படுகிறது. வழக்கமாக செல்லக்கூடிய 2,275 பஸ்களும் கூடுதலாக 794 பஸ்களும் சிறப்பு பஸ்களாக இயக்கப்படுகின்றன.
இந்த பஸ்கள் காலை 10 மணி முதல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 5 பஸ் நிலையங்களில் இருந்து புறப்பட்டு சென்றன. செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்துக்கு செல்லக்கூடிய பஸ்கள் அண்ணாநகர் மேற்கு பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றன. முன்பதிவு செய்த பயணிகள் அங்கு சென்று ஏறினார்கள்.
கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லக்கூடிய பஸ்கள் அடையாறு காந்தி நகரில் உள்ள மாநகர பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்கிறது. பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து ஆற்காடு, ஆரணி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர் ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
தாம்பரம் சான்டோரியம் பஸ் நிலையத்தில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் புறப்பட்டு செல்கின்றன. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, நெல்லை, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்களும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, விழுப்புரம், பண்ருட்டி, நெய்வேலி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், கோவை ஆகிய நகரங்களுக்கு இங்கிருந்து சிறப்பு பஸ்கள் புறப்பட்டு செல்கின்றன.தாம்பரம், பெருங்களத்தூர் பஸ் நிலையங்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு ஊரப்பாக்கத்தில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சிறப்பு பஸ்கள் அந்தந்த பஸ் நிலையங்களுக்கு காலையில் அனுப்பப்பட்டு அங்கிருந்து பயணிகளை ஏற்றிச் சென்றது. பொங்கல் கொண்டாடுபவர்கள் பெரும்பாலும் கடைசி நேர பயணத்தையே மேற்கொள்வார்கள். அதனால் 13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இன்று (வியாழக்கிழமை) 1779 சிறப்பு பஸ்களும் நாளை 1872 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது. முன்பதிவு செய்த பயணிகள் தாங்கள் பயணம் செய்ய வேண்டிய பஸ் நிலையத்திற்கு பஸ் புறப்படுவதற்கு முன்பே செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கோயம்பேடு பஸ் நிலையத்தின் பின்புறம் தற்காலிக நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. 7,8,9 ஆகிய தற்காலிக நடைமேடையில் முன்பதிவு செய்யாத பயணிகள் பயணம் செய்யலாம். திருச்சி, மதுரை, சேலம் போன்ற ஊர்களுக்கு அங்கிருந்து சிறப்பு பஸ்கள் புறப்பட்டு செல்லும். இதுதவிர 1, 2 நடைமேடைகளும் முன்பதிவு இல்லாத பயணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 3, 4, 5, ஆகிய நடைமேடைகளில் முன்பதிவு செய்த பயணிகள் பயணம் செய்ய பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது என்று போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை6 hours 3 min ago |
உருளைக்கிழங்கு பிரெட்4 days 6 hours ago |
மினி பான் கேக்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-05-2024
08 May 2024 -
தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி
08 May 2024ஐதராபாத், தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
126-வது மலர் கண்காட்சி துவக்கம்: நீலகிரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
08 May 2024நீலகிரி, நீலகிரியில் மலர் கண்காட்சி நாளை தொடங்கவுள்ளதை முன்னிட்டு நாளை 10-ம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். ம
-
வேளாண், மீன்வள படிப்புகளில் சேர விண்ணப்பங்களை ஜூன் மாதம் 6-ம் தேதி வரை அனுப்பலாம்
08 May 2024கோவை : வேளாண்மை மற்றும் மீன்வள படிப்புகளில் சேர ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்ச
-
தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
08 May 2024சென்னை : தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல, வேதனை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : 8 மாவட்டங்களல் இன்று மழை பெய்யும்
08 May 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 8 மா
-
தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வேலாயுதன் காலமானார்
08 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க.வின் முதல் எம்.எல்.ஏ. வேலாயுதன் மாரடைப்பு காரணமாக காலமானார்.
-
இஸ்ரேலுக்கு குண்டுகள் அனுப்புவதை 2 வாரத்திற்கு நிறுத்தியது அமெரிக்கா
08 May 2024காசா : ரபா நகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் இஸ்ரேலுக்கு குண்டுகளை அனுப்புவதை அமெரிக்கா 2 வாரத்துக்கு நிறுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம், வழக்கு எப்படி அதிகரிக்கிறது? - அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
08 May 2024மதுரை : கஞ்சா வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலர், தமிழ்நாடு காவல்துறை தலைவர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
நீரவ் மோடியின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி
08 May 2024லண்டன் : நீரவ் மோடியின் ஜாமீன் மனு லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 5-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அமலாக்க துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&
-
ஸ்டிராங் ரூமில் கூடுதல் கேமரா பொருத்துமாறு அறிவுறுத்தல்; சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
08 May 2024சென்னை, வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தேர்
-
ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம்: 2 உயரதிகாரிகள் கைது
08 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம் தீட்டிய விஷயத்தில் உக்ரைனின் 2 பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என சி.என்.என்.
-
அமெரிக்க மாகாண செனட் தேர்தலில் போட்டி: திக நிதி திரட்டிய இந்திய வம்சாவளி இளைஞர்
08 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் சென்ட் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஸ்வின் ராமசாமி என்ற இளைஞர், 2,80,000 டாலர் நிதி திரட்டி உள்ளார
-
அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் துவக்கம்: தமிழ்நாடு தலைமை செயலாளர் தகவல்
08 May 2024சென்னை, அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் தொடங்கும் என தலைம
-
திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் 5 மலர்களை மட்டும் பயன்படுத்த உத்தரவு
08 May 2024திருவனந்தபுரம் : திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் 5 மலர்களை மட்டும் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
-
நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
08 May 2024காலஹன்டி, இந்தியாவில் அடுத்த 10-15 ஆண்டுகளில் வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
மும்பை, திருப்பதி, திருச்சிக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவை துவக்கம்
08 May 2024சேலம், மும்பை, திருப்பதி, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவையை தொடங்கவுள்ளதாக ஏர்சபா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
பிரதமர் மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு
08 May 2024சென்னை : தேர்தல் பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி வரும் பிரதமர் மோடி மீது உடனடி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில்
-
கனமழையால் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் குழந்தை உள்பட 7 பேர் பலி
08 May 2024ஐதராபாத் : கனமழையால் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
-
தென் இந்தியர்கள் ஆப்ரிக்கர்கள்; சாம் பிட்ரோடா கருத்து ஏற்க முடியாதது: காங்.,
08 May 2024புதுடில்லி, தென் இந்தியர்கள் ஆப்ரிக்கர்கள் என்று கூறிய சாம் பிட்ரோடா கருத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
-
ஒரே நாளில் மருத்துவ விடுப்பு எடுத்த 300 ஊழியர்கள்: ஏர் இந்தியாவின் 78 விமானங்கள் ரத்து: அவதிக்குள்ளான பயணிகள்
08 May 2024புதுடெல்லி : ஒரே நாளில் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மருத்துவ விடுப்பு எடுத்ததால் ஏர் இந்தியா விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
-
மோடியின் ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் வளம் கண்டுள்ளன : நிர்மலா சீதாராமன் தகவல்
08 May 2024புதுடெல்லி : தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள அரசின் கீழ் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்கள் சீர்குலைந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியினரும், ராகுல் காந்தியும் சொல்லி வருகின
-
கேரளாவில் நைல் காய்ச்சல் பரவல்: 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
08 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவி வரும் நைல் காய்ச்சலை தொடர்ந்து அங்கு 3 மாவட்டங்களுக்கு மாநில சுகாதாரதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பிரேசிலில் வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு
08 May 2024பிரேசிலியா, பிரேசிலில் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.
-
கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் வழக்கில் சுப்ரீம் கோர்ட் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது
08 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் நாளை (வெள்ளிக்கிமை) உத்தரவு பிறப்பிக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.