எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆதார் எண் பெறாதவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதார் உதவி மையங்களை அணுகி பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் அனைத்து வட்டாட்;சியர் அலுவலகங்களில் 11 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களை அமைத்தும், தமிழ்நாடு மின்னணு நிறுவனம் திருச்சிராப்பள்ளி மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகம், மாநகராட்சி கோட்ட அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் 9 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களை அமைத்து 01.01.2016 முதல் ஆதார் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆதார் எண்ணிற்கென ஏற்கனவே பதிவு செய்து இந்திய தனித்துவ அடையாள ஆணையதத்தின் வாயிலாக ஆதார் எண் வழங்கப்பெற்றவர்கள் ஒருமுறைக்கு மேல் எத்தனை முறை மீண்டும் பதிவு செய்தாலும் புதிய ஆதார் எண் பெற இயலாது. ஆதார் எண் பெறுவதற்கு ஒரு முறை பதிவு செய்தாலே போதுமானதாகும்.
ஆதார் மையங்கள்
ஆதார் அட்டைக்கு பதிவு செய்து ஆதார் எண் அல்லது ஆதார் அட்டை கிடைக்கப் பெறாதவர்கள் மற்றும் ஆதார் அட்டையை தொலைத்தவாகள் தங்களது ஆதார் எண்ணை தெரிந்துகொள்ள ஏதுவாக, தற்போது தமிழ்நாடு மின்ஆளுமை முகமை "ஆதார் உதவி மையங்களை" அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் அமைத்துள்ளது. இம்மையங்களை 28-02-2017 வரை மட்டுமே செயல்படும்.
எனவே இந்த ஆதார் உதவி மையங்களில் ஆதார் எண்ணிற்கு ஏற்கனவே பதிவுகளை செய்துவிட்டு ஆதார் எண்ஃஆதார் அட்டை கிடைக்கப்பெறாத பொதுமக்கள் மற்றும் ஆதார் அட்டையை தொலைத்தவர்கள் நேரில் சென்று தங்களது பெயர், பிறந்த தேதி, அஞ்சல் குறியீடு எண், கைவிரல் ரேகை மற்றும் கருவிழிகளை பதிவு செய்து சில வினாடிகளில் தங்களின் ஆதார் எண்ணை அறிந்து கொள்ளலாம். கிடைத்த ஆதார் எண்ணை சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலக அரசு இ-சேவை மையங்களில் காண்பித்து விரல்ரேகைஇ கருவிழியினை பதிவு செய்து ரு.30ஃ- மட்டும் கட்டணம் செலுத்தி பிளாஸ்டிக் ஆதார் அட்டையாகவோ அல்லது ரு.10- மட்டும் செலுத்தி காகிதத்தில் அச்சிட்டோ பெற்றுக்கொள்ளலாம்.
எனவே ஆதார் எண்ணிற்கு ஒருமுறை பதிவு செய்தவர்கள் திரும்ப திரும்ப நிரந்தர ஆதார் பதிவு மையத்திற்கு செல்ல தேவையில்லை என்றும், வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள ஆதார் உதவி மையங்களை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


