முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் தொகுதி அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆரின் 100வது பிறந்தநாள் விழா ஆலோசனை கூட்டம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று சிறப்புரை:

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம். - அ.தி.மு.க பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா அவர்களின் ஆணைக்கிணங்க திருமங்கலம் தொகுதி அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 100வது பிறந்தநாள் விழா ஆலோசனை கூட்டத்தில் தமிழக வருவாய்துறை அமைச்சர்,கழக அம்மா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அ.தி.மு.க ஆலோசனை கூட்டம்:

கழகத்தின் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா அவர்களின் ஆணைக்கிணங்க அ.தி.மு.க நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 100வது பிறந்தநாள் விழாக்கள் தமிழகமெங்கிலும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக எம்.ஜி.ஆரின் 100வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடிடும் வகையில் மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் தொகுதி வாரியாக ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.இதில் முதலாவதாக மதுரை புறநகர் மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி சார்பில் எம்.ஜி.ஆரின் 100வது பிறந்தநாளை எழுச்சியுடன் கொண்டாடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருமங்கலம் மாஸ் மகாலில் சிறப்பாக நடைபெற்றது.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பு:

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மதுரை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.,தலைமை வகித்தார். திருமங்கலம் ஒன்றிய கழக செயலாளர் வக்கீல்.அன்பழகன்,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராம்சாமி,திருமங்கலம் நகரச் செயலாளர் ஜே.டி.விஜயன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலோசனை கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் முன்னாள் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்,ஒன்றிய அம்மா பேரவை தலைவர் சாத்தங்குடி தமிழழகன் வரவேற்றார்.திருமங்கலம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள்,வீராங்கனைகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த எம்.ஜி.ஆரின் 100வது பிறந்தநாள் விழா ஆலோசனை கூட்டத்தில் தமிழக வருவாய்துறை அமைச்சரும்,கழக அம்மா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு எம்.ஜி.ஆரின் 100வது பிறந்தநாளை மதுரை புறநகர் மாவட்டம் முழுவதிலும் கழக கொடியேற்றி இனிப்புகள் வழங்கி போட்டிகள் நடத்தி சிறப்பாக கொண்டாடுவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

தீர்மானம் நிறைவேற்றம்:

அப்போது ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்திடுவதற்காக மறைந்த முதல்வர் அம்மா அவர்கள் தொடர்ந்து போராடி வந்த நிலையில் தி.மு.க எதையும் செய்யவில்லை.ஆனால் தற்போது தமிழர்களுக்கு செய்த துரோகத்தை மறைத்திடும் வண்ணம் கபட அரசியல் நாடகத்தை நடத்திடும் தி.மு.க விற்கு இந்த கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானமும்,ஜல்லிக்கட்டில் இழந்த உரிமையை மீட்க புரட்சித்தலைவி அம்மா வழியில் கழக பொதுச்செயலாளர் சின்னம்மா அவர்கள் கடந்த 11.01.2017 அன்று ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க பாரத பிரதமருக்கு கடிதம் எழுதி அதை கழக நாடாளுமன்;ற உறுப்பினர்கள் மூலம் மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தியது மட்டுமின்றி 7கோடி தமிழர்களின் உயிர்நாடியான ஜல்லிக்கட்டை மத்திய அரசிடம் போராடியும் சட்டத்தின் வழியில் போராடியும் அம்மாவின் அரசு ஜல்லிக்கட்டை நிச்சயம் நடத்திக் காட்;டும் என்ற தீர்மானமும் தொண்டர்களின் பலத்த கரவொலிக்கிடையே ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கலந்து கொண்டவர்கள்:

இக்கூட்டத்தில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம்,முன்னாள் மதுரை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர்கள் எம்.ஜெயராமன்,ம.முத்துராமலிங்கம்,முன்னாள் எம்.எல்.ஏ.,தமிழரசன்,மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,கழக சிறுபான்மை பிரிவு பொருளாளர் ஜான்மகேந்திரன்,மதுரை புறநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம்,எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஓம்கே.சந்திரன்,விவசாயஅணி செயலாளர் வேலுச்சாமி,இலக்கிய அணி செயலாளர் திருப்பதி,சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜானவாஸ்,மீனவரணி செயலாளர் போத்திராஜ்,மகளிரணி செயலாளர் சண்முகப்பிரியா ஹோசிமின்,வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் வக்கீல்.ரமேஷ், நிலையூர் முருகன், திருமங்கலம் நகர அவைதலைவர் ஜஹாங்கீர்,முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் சதீஸ்சண்முகம்,துணைசெயலாளர் ராஜமணி,பொருளாளர் துரைப்பாண்டி,மாவட்ட பிரதிநிதி வி.எஸ்.கலைச்செல்வன்.திருமங்கலம் ஒன்றிய அவைதலைவர் அன்னகொடி,துணை செயலாளர்கள் சுகுமார்,சுமதிசாமிநாதன்,கள்ளிக்குடி ஒன்றிய துணை செயலாளர் பிரபுசங்கர்,பொருளாளர் கண்ணன்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அன்னலட்சுமி,முன்னாள் டி.கல்லுப்பட்டி யூனியன் சேர்மன் பாவடியான்,பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணி,முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் சாமிநாதன்,பரமசிவம் மற்றும் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி ஒன்றிய,நகர, பேரூர்,கிளை,வார்டு கழக செயலாளர்கள்,கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago