எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மேல்நிலை முதலாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 500 மாணவர்களுக்கும், உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 353 மாணவியர்களுக்கும், பெஸ்கி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 251 மாணவியர்களுக்கும், உளுந்தூர்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 43 மாணவ மாணவியர்களுக்கும் என மொத்தம் 1158 பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கி விழாப்பேருரையாற்றினார்.
மறைந்த தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சீரிய சிந்தனையில் உதித்த தொலைநோக்குத் திட்டமான, பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம், இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தொடங்கிய மிகவும் அற்புதமான திட்டமாகும். பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காகவும், பெண் கல்வியின் இடைநிற்றலை தடுப்பதற்காகவும், பள்ளியில் பயிலும் பெண்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வந்தனர்.
2006-ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு மறைந்த முதலமைச்சர் அம்மா அவர்களை சந்தித்து, எங்களுக்கும் விலையில்லா மிதிவண்டிகளை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை அம்மா அவர்களிடம் சமர்ப்பித்து, உடனடியாக அமைச்சரவையை கூட்டி, மாணவர்களுக்கும் விலையில்லா மிதிவண்டிகளை வழங்க ஆணையிட்டார்கள். மேலும், பள்ளிக் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கும் அற்புதமான திட்டத்தை தேர்தல் அறிக்கையில் தெரிவித்தவாறு, தொடர்ந்து 5 ஆண்டுகளாக கொடுக்கப்பட்டும், மீண்டும் தொடர்ந்து ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் இத்திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவித்தார்கள்.
எல்லா துறைகளுக்கும் எடுத்துக்காட்டாக பள்ளி கல்வித்துறையை முன்னுதாரணமாக வைத்து, கல்வித்துறைக்கென நிதியாண்டில் அதிகமான நிதியை ஒதுக்கி, பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள், விலையில்லா மடிக்கணினிகள், விலையில்லா பாடப்புத்தகங்கள், விலையில்லா கல்வி உபகரணங்கள் (வரைகலைப்பெட்டி, சீருடைகள், காலனிகள், சேனிட்டரிநாப்கின்கள், வரைபடம்) போன்றவை தொடர்ந்து பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் ஓராண்டுகூட இத்திட்டம் நீடிக்கவில்லை. உடனடியாக அம்மாநில முதலமைச்சர் இத்திட்டம் என்னால் நிறைவேற்ற முடியாது என பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் அம்மா தொடர்ந்து 6-வது ஆண்டாக இத்திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.
உலகிலேயே மிகப்பெரிய பணக்கார நாடான அமெரிக்காவில்கூட இத்திட்டம் இல்லை. ஆனால், தமிழகத்தில் மாணவ மாணவியர்களை கல்வியில் மேம்பாடு அடைவதற்காக இத்திட்டம் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் 36 லட்சம் மாணவ மாணவியர்களுக்கு ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 1,25,578 மாணவர்களுக்கு ரூ.205 கோடி மதிப்பீட்டிலும், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் ரூ.13 கோடியே 10 லட்சம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது.
விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் 1,30,939 மாணவ மாணவியர்களுக்கு ரூ.48 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் ரூ.5 கோடியே 75 லட்சம் மதிப்பிலான 12,468 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், தனியார் பள்ளிகளைக் காட்டிலும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் பெண்களுக்கு தனியே கழிவறை கட்டப்பட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் அம்மா அறிவித்த அனைத்துத் திட்டங்களும் தொலைநோக்குத் திட்டங்களாகும் என சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். 2015-16ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் 100 சதவிகிதம் தேர்ச்சிபெற்ற பாடப்பகுதி ஆசிரியர்களுக்கு தலா ரூ.1000 வீதம் பரிசு வழங்கினார்.
இவ்விழாவில், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் இராஜேந்திரன், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் இரா.குமரகுரு, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அ.பிரபு, திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தாமரை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சா.மார்ஸ், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
தேர்தலில் போட்டியிட தடை கோரி பிரதமர் மோடிக்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
-
உங்கள் ஓட்டு உங்கள் குரல்: பிரதமர் மோடி அழைப்பு
26 Apr 2024புதுடில்லி, 13 மாநிலங்களில் நேற்று 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
சென்னைக்கு ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீர்: ஆந்திர மாநில அரசு தகவல்
26 Apr 2024ஊத்துக்கோட்டை, ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.