முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்ட விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள கடைகள் ஏலம் மூலம் வாடகைகு விடப்பட உள்ளது

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2017      திருச்சி

திருச்சி மாவட்டம் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள கடைகள் ஏலம் மூலம் வாடகைக்கு விடப்பட உள்ளது என விற்பனைக் குழு செயலாளர் சு.மல்லிகா தெரிவித்துள்ளார்.

 

விற்பனை குழு

 

தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் திருச்சி விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள துறையூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கட்டப்பட்டுள்ள (10.86அஒ4.46அ)35.60ஒ14.60 அடி (519.76 சதுர அடி) அளவுள்ள 5 கடைகள,; 03.02.2017 அன்று மாலை 3.30 மணிக்கு பொது ஏலம் மூலம் வாடகைக்கு விடப்பட உள்ளது.

ஏலம் எடுக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், விண்ணப்பத்தினை திருச்சி விற்பனைக்குழு 199, மதுரை ரோடு, திருச்சி -8 என்ற முகவரியில் 03.02.2017ம் தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணிக்குள் ரூ.100 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 81446-04008 என்று எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு திருச்சி விற்பனைக்குழு செயலாளர் சு.மல்லிகா தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்