எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 275 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஆணைகளை மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் வழங்கினார்.
முன்னணி நிறுவனங்கள்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்டம் ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட கோயம்புத்தூர், திருப்பூர், சென்னை போன்ற மாவட்டங்களிலிருந்து தொழில் நிறுவனங்களின் மூலம் வேலைவாய்ப்பு முகாம்கள் ஏற்படுத்தி பெருவாரியான இளைஞர்களுக்கு தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் 2014_2015ம் ஆண்டில் மூன்று கல்லூரிகளில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. அதில் 2060 இளைஞர்கள் பங்கேற்று 13 முன்னணி நிறுவனங்கள் மூலம் 615 இளைஞர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. 2015_2016ம் ஆண்டில் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு அதில் 900 இளைஞர்கள் பங்கேற்று 14 முன்னணி நிறுவனங்கள் மூலம் 206 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்
இந்த நிதியாண்டில் வட்டாரத்திற்கு ஒரு வேலைவாய்ப்பு முகாம் வீதம் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் முதல் கட்டமாக கூடலூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 28.12.2016 அன்று நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 20 முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு இம்முகாமிற்கு வருகை தந்த 1151 இளைஞர்களில் 275 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஆணைகள் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கரால் வழங்கப்பட்டது.
275 பேருக்கு ஆணை
தற்போது இரண்டாம் கட்டமாக குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் 25.01.2017 அன்று நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 35 முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு முகாமில் கலந்து கொண்ட 1600 இளைஞர்களில் 275 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஆணைகள் மாவட்ட கலெக்டரால் வழங்கப்பட்டது. இந்த வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு ஆணை பெற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு எதிர்காலத்தில் சிறப்பாக திகழ வேண்டும். வேலைவாய்ப்பு வழங்கிய நிறுவனங்கள் வேலைவாய்ப்பு ஆணை பெற்ற இளைஞர்களை நல்ல முறையில் கண்காணித்து அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும் அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் அவர்களின் எதிர்காலத்தை நல்ல முறையில் அமைத்திட அனைத்து வழிகளிலும் உதவிட வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் கூறினார். இம்முகாமில் மகளிர் திட்ட இயக்குநர்(பொ) எஸ். முருகேசன், கல்லூரி முதல்வர் டாக்டர் வி.கே.ஷூலா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்(பொ) மாரப்பா மற்றும் உதவி திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
04 Feb 2026சென்னை, துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ.
-
எப்ஸ்டீன் பற்றி கேள்வி கேட்ட தனியார் பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பரபரப்பு
04 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
கடும் பனிப்பொழிவு: ஜப்பானில் பலி 35 ஆக உயர்வு
04 Feb 2026டோக்கியோ, ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
04 Feb 2026- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி பிரதிஷ்டா தினம்.
- சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- திருமயம் ஆண்டாள் எண்ணெய்க் காப்பு விழா தொடக்கம்.
-
இன்றைய நாள் எப்படி?
04 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
04 Feb 2026


