முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமுக்கூடலில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்தநாள்விழா

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2017      காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் திருக்முக்கூடல் கிராமத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்தநாள்விழா பொதுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கினார். கழக அமைப்பு செயலாளர் மைதிலிதிருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் இரா.கமலக்கண்ணன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். நிகழ்ச்சியில் தலைமை கழகப் பேச்சாளர் நடிகர் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். இதில் அதிமுக அரசின் சாதனைகள் குறித்து விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பிரகாஷ்பாபு, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுமதிகுணசேகரன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் ஒழையூர் நாராணசாமி எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தண்டரை தணிகைவேல், அம்மா பேரவை செயலாளர் திருவந்தவார் வி.முருகன், ஜெயவேல், வரதராஜீலு உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருமுக்கூடல் கிளைச் செயலாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்