எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி.
தூத்துக்குடி மாவட்டத்தில் பொது மக்கள் தகுந்த ஆதாரத்துடன் மனு செய்தால் குடும்ப அட்டை உடனடியாக வழங்கும் நிலை உள்ளது என கலெக்டர் எம்.ரவி குமார் தெரிவித்தார்.திருவைகுண்டம் வட்டம் அணியாபரநல்லூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரின் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு தூத்துக்குடி சார் ஆட்சியர் தீபக்ஜேக்கப் முன்னிலை வகித்தார். வட்டாட்சியர் செல்வபிரசாத் வரவேற்புரையாற்றினார். முகாமிற்கு தலைமைதாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கி கலெக்டர் எம்.ரவி குமார் பேசியதாவது:மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு கிராமத்தில் மாதம் ஒரு முறை மாவட்ட ஆட்சித்தலைவரின் மனு நீதி நாள் முகாம் நடைபெற்று வருகிறது. வருடத்திற்கு 12 முகாம்கள் ஆட்சித்தலைவரால் நடத்தப்படுகிறது. நமது மாவட்டத்தில் 403 கிராமங்கள் உள்ளன. அனைத்து கிராமங்களிலும் முகாம்கள் நடத்த எத்தனை வருடங்கள் ஆகும் என்பதனை பொது மக்கள் எண்ணி பார்க்க வேண்டும். முகாம் உடனடியாக நடத்தப்படவில்லை ஒரு மாதத்திற்கு முன்பே பொது மக்களிடம் கோரிக்ககை மனுக்கள் வாங்கப்பட்டு அதிகாரிகள் பரீசிலனைக்குப் பின்னர் தான் இந்த நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் சமந்தப்பட்ட கிராமத்தில் பொது மக்களுக்கு எந்த விதமான குறைகளும் இல்லை என்ற நிலையினை அதிகாரிகள் உருவாக்க வேண்டும். அரசு நிர்வாகம் மக்களுக்கானது. எனவே அரசு அதிகாரிகள் தியாக உணர்வுடன் செயல்பட வேண்டும். அரசை நோக்கி மக்கள் என்ற நிலையினை மாற்றி மக்களை நோக்கி அரசு செயல்படுகிறது என்பதற்காக இது போன்ற முகாம்கள் நடைபெறுகின்றன. கிராமத்தில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் அரசு செயல்படுத்தும் அனைத்து நலத்திட்டங்களும் சென்று சேர வேண்டும் என்பதே மனுநீதி நாள் முகாமின் நோக்கம் ஆகும். முகாம்கள் தவிர்த்து ஒவ்வொரு திங்கக்கிழமை அன்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாளில் மனுக்கள் அளித்து பொது மக்கள் தங்களுக்கு வேண்டிய நியாயமான உதவிகளை பெற்றுக் கொள்ளலாம். நமது மாவட்டத்தில் குடும்ப அட்டையில் ஆதார்கார்டு, செல் நம்பர் இணைக்கும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. இதனால் 3 இலட்சுதுத 90 ஆயிரம் நபர்களின் பெயர்கள் நீக்ககப்பட்டுள்ளது. 40 ஆயிரம் குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது பொது மக்கள் தகுந்த ஆதாரத்துடன் மனு செய்தால் குடும்ப அட்டை உடன் வழங்கும் நிலை உள்ளது. சுகாதாரத்தில் மாநிலத்தில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் நமது மாவட்டம் சுகாதாரத்தில் முதல் இடத்தில் உள்ளது. அணியாபரநல்லூர் கிராமத்தில் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் இல்லாத நிலையினை அடைந்திட பொது மக்கள் அதிகாரிகளிடம் உடன் இணைந்து பணியாற்றி, அணியாபரநல்லூர் கிராமத்தினை முழு சுகாதார கிராமமாக மாற்ற வேண்டும் என்றார்.முன்னதாக வருவாயத்துறையின் கீழ் 16 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவிற்கான ஆணையினையும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் விபத்து மற்றும் ஈமச்சடங்கிற்கான நிவாரணத்தொகை 1 பயனாளிக்கு ரூ.102500-க்கான காசோலையினையும் நலிந்தோர் உதவித்தொகை 4 பயனாளிகளுக்கு தலா ரூ.20,000- விதம் ரூ.80,000- க்கான காசோலையினையும், விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, முதியோர் உதவித் தொகை என 32 பயனாளிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1000- வீதம் பெறுவதற்கான ஆணையினையும், மாவட்ட வழங்கல்துறையின் மூலம் 10 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டையினையும், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் மூலம் பாரத மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.1,70,000- மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புக்கான அனுமதி ஆணையினையும், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.1,70,000- மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புக்கான அனுமதி ஆணையினையும், பசுமை வீடுகள் குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.2,10,000- மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புக்கான அனுமதி ஆணையினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழு 10 பயனாளிகளுக்கு வேலை அடையாள அட்டையினையும், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துiறின் மூலம் 1 பயனாளிக்கு தையல் இயந்திரம் மற்றும் தனிநபர் இல்லக் கழிப்பறைக்கட்டுவதற்கான கடனுதவியினையும் கலெக்டர் எம்.ரவி குமார், அவர்கள் வழங்கினார்.மேலும் விளையாட்டுத்துறையின் சார்பாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இம்முகாமில் தூத்துக்குடி சார் ஆட்சியர் தீபக்ஜேக்கப், பயிற்சி ஆட்சியர் ராஜகோபலசங்கரா, மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட அலுவலர் பிச்சை, மகளிர் திட்ட அலுவலர் இந்துபாலா, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) காமராஜ், இணை இயக்குநர் (கால்நடை) ராமசாமி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.போஸ்கோராஜா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) முத்து எழில், துணை இயக்குநர் (நிலம்) பிரபாகர், மாவட்ட வழங்கல் அலுவலர் செழியன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பாத்திமா, ஆதிதிராவிடர் நல அலுவலர் கமலம், தாட்கோ மேலாளர் யுவராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல் -ஊரகவளர்ச்சிதிட்டம்) மைக்கேல், திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சக்திவேல், வட்டாட்சியர் செல்வபிரசாத் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்தது இந்தியா
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்துள்ளது இந்திய அணி.
8 அணிகள்...
-
வைஷாலிக்கு முதல்வர் வாழ்த்து
16 Sep 2025ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் தொடரை வென்று தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி (24) அசத்தியுள்ளார்.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை, யு.ஏ.இ. வெற்றி
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் திங்கட்கிழமை நடந்த 2 போட்டிகளில் இலங்கை, யு.ஏ.இ. வெற்றிப்பெற்றன. அடுத்த சுற்று வாய்பை இழந்தது ஓமன் வெளியேறியது.
-
வடகொரியாவில் ஆங்கில சொற்களை பயன்படுத்த தடை
16 Sep 2025வடகொரியா : ஆங்கில சொற்களை உச்சரிக்க அந்த நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.
-
இந்தியாவில் பார்வையற்றோருக்கான மகளிர் டி-20 உலகக்கோப்பை நடக்கிறது
16 Sep 2025மும்பை : பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-09-2025.
17 Sep 2025 -
ஆன்லைன் சூதாட்ட செயலி பண மோசடி: 2 இந்திய முன்னாள் வீரர்களுக்கு சம்மன்
16 Sep 2025புதுடெல்லி : ‘ஓன்எக்ஸ்பெட்’ என்ற பந்தய செயலியுடன் தொடர்புடைய வழக்கின் விசாரணையின் பகுதியாக அமலாக்க இயக்குநரகம் இவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
-
சற்று குறைந்த தங்கம் விலை
17 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையானது.
-
பெரியார் 147-வது பிறந்தநாள்: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
17 Sep 2025சென்னை, பெரியாரின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
-
இனி விருப்ப ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு
17 Sep 2025புதுடெல்லி, 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: அமித்ஷாவிடம் இ.பி.எஸ். நேரில் வலியுறுத்தல்
17 Sep 2025சென்னை, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
75-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் வாழ்த்து
17 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பி்றந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
-
பிரதமர் நரேந்திரமோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
17 Sep 2025ரோம், பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி பிரம்மோற்சவ விழா: பாதுகாப்பு பணிக்கு 4,200 போலீசார் குவிப்பு
17 Sep 2025திருப்பதி, திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 4,200 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
17 Sep 2025சென்னை, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவு பேரொளி பெரியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
17 Sep 2025சென்னை, தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார் என அவரது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Sep 2025சென்னை, தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் 21 மாவட்டங்களில் இன்று (செப்.18-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு சாபக்கேடு: சித்தராமையா பேச்சு
17 Sep 2025பெங்களூரு, யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
கொடிக்கம்பம் அகற்றும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
17 Sep 2025சென்னை, கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
பிரதமர் மோடி பிறந்த நாளில் 12 ஆண்டுகளாக இலவச டீ வழங்கும் வியாபாரி..!
17 Sep 2025சென்னை, பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக டீயை வியாபாரி வழங்கினார்.
-
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
17 Sep 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 8,641 கன அடியாகக் குறைந்தது.
-
2025-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.22.08 லட்சம் கோடியாக அதிகரிப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா தகவல்
17 Sep 2025அமராவதி, ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும் என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி.
-
இந்திய தயாரிப்பு பொருட்களை மட்டும் மக்கள் வாங்க வேண்டும்: பிரதமர் நரேந்திரமோடி கோரிக்கை
17 Sep 2025போபால், நீங்கள் வாங்கும் எந்தவொரு பொருளும் இந்திய தயாரிப்பு பொருளாக இருக்க வேண்டும் என 140 கோடி இந்தியர்களிடமும் பிரதமர் மோடி வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
-
வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம்: டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
17 Sep 2025புதுடெல்லி, வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம் என்று டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்கருத்து தெரிவித்துள்ளது.
-
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு இறுதி முடிவு 24-ம் தேதி வெளியீடு
17 Sep 2025சென்னை, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு வரும் 24-ம் தேதி வரை நடக்கிறது.