எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி.
தூத்துக்குடி மாவட்டத்தில் பொது மக்கள் தகுந்த ஆதாரத்துடன் மனு செய்தால் குடும்ப அட்டை உடனடியாக வழங்கும் நிலை உள்ளது என கலெக்டர் எம்.ரவி குமார் தெரிவித்தார்.திருவைகுண்டம் வட்டம் அணியாபரநல்லூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரின் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு தூத்துக்குடி சார் ஆட்சியர் தீபக்ஜேக்கப் முன்னிலை வகித்தார். வட்டாட்சியர் செல்வபிரசாத் வரவேற்புரையாற்றினார். முகாமிற்கு தலைமைதாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கி கலெக்டர் எம்.ரவி குமார் பேசியதாவது:மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு கிராமத்தில் மாதம் ஒரு முறை மாவட்ட ஆட்சித்தலைவரின் மனு நீதி நாள் முகாம் நடைபெற்று வருகிறது. வருடத்திற்கு 12 முகாம்கள் ஆட்சித்தலைவரால் நடத்தப்படுகிறது. நமது மாவட்டத்தில் 403 கிராமங்கள் உள்ளன. அனைத்து கிராமங்களிலும் முகாம்கள் நடத்த எத்தனை வருடங்கள் ஆகும் என்பதனை பொது மக்கள் எண்ணி பார்க்க வேண்டும். முகாம் உடனடியாக நடத்தப்படவில்லை ஒரு மாதத்திற்கு முன்பே பொது மக்களிடம் கோரிக்ககை மனுக்கள் வாங்கப்பட்டு அதிகாரிகள் பரீசிலனைக்குப் பின்னர் தான் இந்த நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் சமந்தப்பட்ட கிராமத்தில் பொது மக்களுக்கு எந்த விதமான குறைகளும் இல்லை என்ற நிலையினை அதிகாரிகள் உருவாக்க வேண்டும். அரசு நிர்வாகம் மக்களுக்கானது. எனவே அரசு அதிகாரிகள் தியாக உணர்வுடன் செயல்பட வேண்டும். அரசை நோக்கி மக்கள் என்ற நிலையினை மாற்றி மக்களை நோக்கி அரசு செயல்படுகிறது என்பதற்காக இது போன்ற முகாம்கள் நடைபெறுகின்றன. கிராமத்தில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் அரசு செயல்படுத்தும் அனைத்து நலத்திட்டங்களும் சென்று சேர வேண்டும் என்பதே மனுநீதி நாள் முகாமின் நோக்கம் ஆகும். முகாம்கள் தவிர்த்து ஒவ்வொரு திங்கக்கிழமை அன்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாளில் மனுக்கள் அளித்து பொது மக்கள் தங்களுக்கு வேண்டிய நியாயமான உதவிகளை பெற்றுக் கொள்ளலாம். நமது மாவட்டத்தில் குடும்ப அட்டையில் ஆதார்கார்டு, செல் நம்பர் இணைக்கும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. இதனால் 3 இலட்சுதுத 90 ஆயிரம் நபர்களின் பெயர்கள் நீக்ககப்பட்டுள்ளது. 40 ஆயிரம் குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது பொது மக்கள் தகுந்த ஆதாரத்துடன் மனு செய்தால் குடும்ப அட்டை உடன் வழங்கும் நிலை உள்ளது. சுகாதாரத்தில் மாநிலத்தில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் நமது மாவட்டம் சுகாதாரத்தில் முதல் இடத்தில் உள்ளது. அணியாபரநல்லூர் கிராமத்தில் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் இல்லாத நிலையினை அடைந்திட பொது மக்கள் அதிகாரிகளிடம் உடன் இணைந்து பணியாற்றி, அணியாபரநல்லூர் கிராமத்தினை முழு சுகாதார கிராமமாக மாற்ற வேண்டும் என்றார்.முன்னதாக வருவாயத்துறையின் கீழ் 16 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவிற்கான ஆணையினையும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் விபத்து மற்றும் ஈமச்சடங்கிற்கான நிவாரணத்தொகை 1 பயனாளிக்கு ரூ.102500-க்கான காசோலையினையும் நலிந்தோர் உதவித்தொகை 4 பயனாளிகளுக்கு தலா ரூ.20,000- விதம் ரூ.80,000- க்கான காசோலையினையும், விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, முதியோர் உதவித் தொகை என 32 பயனாளிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1000- வீதம் பெறுவதற்கான ஆணையினையும், மாவட்ட வழங்கல்துறையின் மூலம் 10 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டையினையும், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் மூலம் பாரத மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.1,70,000- மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புக்கான அனுமதி ஆணையினையும், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.1,70,000- மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புக்கான அனுமதி ஆணையினையும், பசுமை வீடுகள் குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.2,10,000- மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புக்கான அனுமதி ஆணையினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழு 10 பயனாளிகளுக்கு வேலை அடையாள அட்டையினையும், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துiறின் மூலம் 1 பயனாளிக்கு தையல் இயந்திரம் மற்றும் தனிநபர் இல்லக் கழிப்பறைக்கட்டுவதற்கான கடனுதவியினையும் கலெக்டர் எம்.ரவி குமார், அவர்கள் வழங்கினார்.மேலும் விளையாட்டுத்துறையின் சார்பாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இம்முகாமில் தூத்துக்குடி சார் ஆட்சியர் தீபக்ஜேக்கப், பயிற்சி ஆட்சியர் ராஜகோபலசங்கரா, மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட அலுவலர் பிச்சை, மகளிர் திட்ட அலுவலர் இந்துபாலா, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) காமராஜ், இணை இயக்குநர் (கால்நடை) ராமசாமி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.போஸ்கோராஜா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) முத்து எழில், துணை இயக்குநர் (நிலம்) பிரபாகர், மாவட்ட வழங்கல் அலுவலர் செழியன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பாத்திமா, ஆதிதிராவிடர் நல அலுவலர் கமலம், தாட்கோ மேலாளர் யுவராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல் -ஊரகவளர்ச்சிதிட்டம்) மைக்கேல், திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சக்திவேல், வட்டாட்சியர் செல்வபிரசாத் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
07 Jul 2025சென்னை, தமிழகத்தில் வருகிற 13-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-07-2025.
07 Jul 2025 -
ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு
07 Jul 2025சென்னை, போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று (ஜூலை 8) உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதி
-
இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை அரசு என்றும் பாதுகாக்கும்: முதல்வர் ஸ்டாலின்
07 Jul 2025சென்னை, “திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை இந்த திராவிட மாடல் அரசு என்றும் அணையாமல் பாதுகாக்கும்.” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள
-
அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது: அமைச்சர் கீதா ஜீவன்
07 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்று கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
-
திருச்செந்தூர் கேவில் கும்பாபிஷேகத்திற்கு 5 லட்சம் பேர் வருகை: அமைச்சர் தகவல்
07 Jul 2025தூத்துக்குடி, கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சுமார் 5 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
உலகின் கவனத்தை கவர்ந்த இந்திய பாதுகாப்புத்துறை: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பெருமிதம்
07 Jul 2025புதுடில்லி, ஆபரேஷன் சிந்தூரின் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களின் வலிமையும் நிருபிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அ
-
பட்டமளிப்பு விழா மேடையில் பா.ம.க.வை விமர்சித்த அமைச்சர்
07 Jul 2025தருமபுரி : அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா மேடையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பா.ம.க.வை விமர்சித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியீடு : இந்தியா நிலை என்ன?
07 Jul 2025துபாய் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்...
-
கே.என்.நேருவின் சகோதரர் மீதான சி.பி.ஐ. வழக்கு நிபந்தனையுடன் ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
07 Jul 2025சென்னை : தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சி.பி.ஐ.
-
அழுத்தமான சூழ்நிலைகளை கவிதையாய் மாற்றியவர்: தோனிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
07 Jul 2025சென்னை, “அழுத்தமான சூழ்நிலையையும் கவிதையாய் மாற்றும் தனித்துவமிக்கவர்” என்று கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள
-
17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9-ம் தேதி நாடு தழுவிய 'ஸ்டிரைக்' முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்பு
07 Jul 2025சென்னை, நாடு தழுவிய அளவில் வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் ப
-
அமெரிக்காவில் சிக்கிய காலிஸ்தான் பயங்கரவாதியை இந்தியா அழைத்து வர ஏற்பாடு
07 Jul 2025புதுடில்லி : அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள காலிஸ்தான் பயங்கரவாதி ஹேப்பி பாசியாவை, விரைவில் நாடு கடத்தி அழைத்து வர இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
-
பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிப்பு: அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
07 Jul 2025வாஷிங்டன், அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்
-
தமிழ்நாடு முழுவதும் சாலை பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு
07 Jul 2025சென்னை : தமிழ்நாடு முழுவதும் சாலை, மேம்பால பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
பீனிக்ஸ் திரைவிமர்சனம்
07 Jul 2025அண்ணன் கொலைக்கு பழி வாங்கும் ஒரு தம்பியின் கதை தான் பீனிக்ஸ் படத்தின் ஒரு வரிக்கதை.
-
வரி விதிப்பு விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா ஆலோசனை
07 Jul 2025பீஜிங் : நாங்கள் மோதலை விரும்பவில்லை. இது போன்ற நடவடிக்கைகள் பயனற்றவை என டிரம்பின் வரி விதிப்பு மிரட்டலுக்கு சீனா பதில் அளித்துள்ளது.
-
ரசிகர்களுக்கு நன்றி சொன்ன விஜய் ஆண்டனி
07 Jul 2025லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அஜய் தீசன் சமுத்திரக்கனி, பிரிகிடா தீப்ஷிகா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் 27 அன்று வெளியான படம் மார்கன்.
-
டெக்சாஸ் கனமழை, வெள்ளம்: பலிஎண்ணிக்கை 82 ஆக உயர்வு; பேரிடராக அறிவித்தார் ட்ரம்ப்
07 Jul 2025டெக்சாஸ் : டெக்சாஸ் மாகாணத்தில் கனமழையால் பலி எண்ணிக்கை உயர்ந்து வரும் வேளையில், அதை இயற்கை பேரிடராக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
33-வது பருவநிலை மாற்ற மாநாட்டிற்கு இந்தியா தலைமை 'பிரிக்ஸ்' நாடுகள் கூட்டறிக்கை
07 Jul 2025ரியோ டி ஜெனீரோ : பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில், 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
-
ஜுராசிக் பார்க் ரீபெர்த் விமர்சனம்
07 Jul 2025ஜுராசிக் பார்க் இதுவரை 2 அத்தியாயம் முடிந்து தற்போது மூன்றாவது அத்தியாயம் வெளியாகியுள்ளது.
-
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு: 'பிரிக்ஸ்' கண்டனம்
07 Jul 2025ரியோ டி ஜெனிரோ, அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புகள் பெரும் கவலைகளை ஏற்படுத்தி இருப்பதாகவும், பொருளாதார ரீதியில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதாகவும் பிரிக்ஸ் நாடுகளின
-
16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது: திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
07 Jul 2025திருச்செந்தூர், 16 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
-
தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்:விவசாயிகள், மக்களுடன் எப்போதும் அ.தி.மு.க. இருக்கும்: இ.பி.எஸ். பேச்சு
07 Jul 2025கோவை, “அ.தி.மு.க. அரசாங்கம் எப்போதும் விவசாயிகள் உடன்; மக்கள் உடன் இருக்கும் என கோவையில் நடந்த விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் அ.தி.மு.க.
-
மணிப்பூரில் 5 தீவிரவாதிகள் கைது
07 Jul 2025மணிப்பூர் : மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த 5 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் கைது செய்துள்ளனர்.