முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்லவன் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்க நிறைவு விழா

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      காஞ்சிபுரம்
Image Unavailable

காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரம் பல்லவன் பொறியியல் கல்லூரியில் "அனோகாபெஸ்ட்-17"என்ற கருத்தரங்கம் நிர்வாகவியல் துறைமற்றும் கணிணிபயன்பாட்டுத்துறைசார்பாக 17ஆம் தேதி துவங்கியது இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு பல்லவன் பொறியியல் கல்லூரியின் நிறுவன தலைவா மற்றும் புதுவைத் தழிழ்ச் சங்கம் தலைவர் "கலைமாமணி"முனைவர் வி.முத்து தலைமை வகித்தார். பல்லவன் பொறியியல் கல்லூரியின் நிறுவனர் மற்றம் செயலாளா கே.ஆர்.சீதாபதி முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் கோபிநாத் வாழ்த்துறைவழங்கினார். நிர்வாகவியல் துறை தலைவர் பேராசிரியர் எஸ்.பாலாஜி வரவேற்புரையாற்றினார். பல்லவன் பொறியியல் கல்லூரியின் நிறுவன தலைவா மற்றும் புதுவைத் தழிழ்ச் சங்கம் தலைவர் "கலைமாமணி"முனைவர் வி.முத்து மாணவர்களுக்கு படிப்பறிவோடு இதரதுறை அறிவுகளையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். இதன் பிறகு மாணவர்களுக்கான பல்திறனறிவு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றமாணவர்களுக்கு சான்றிதழ்களையும், பரிசுகளையும் கல்லூரியின் தலைவர் மற்றும் முதல்வர் வழங்கி கௌரவித்தனர்.

 

இக்கருத்தரங்கில் பல்லவன் பொறியியல் கல்லூரி பொருளாளர் சம்பந்தமூர்த்தி, கல்லூரிநிர்வாகிகள் பழனி மீனாம்பாள்குப்புசாமி, மஞ்சுளாதேவி சிவசண்முகம், ஜானகி புருஷோத்தமன், எத்திராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் கல்லூரியின் அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். கணிணி பயன்பாட்டுத் துறைத்தலைவர் ஆனந்தி நன்றியுரையாற்றினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்