முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேடசந்தூரில் சீமை கருவேல மரங்களை வேரோடு அழிக்க சிறப்பு விழிப்புணர்வு முகாம்

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2017      திண்டுக்கல்
Image Unavailable

குஜிலியம்பாறை : வேடசந்தூரில் இயங்கும் மதுரை காமராஜர் பல்கலை கழக உறுப்பு கல்லூரியில் சீமை கருவேல மரங்களை வேரோடு அழிக்க சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இவ்விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவரின் வேண்டுகோளுக்கு இணங்க கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. இம்முகாமிற்கு நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். வணிகவியல் துறை பேராசிரியை தலைமை வகித்தார். இம்முகாமில் கல்லூரி பேராசிரியர்கள் ஸ்ரீதர், பொம்முராஜ், சந்திர சேகர், பேராசிரியைகள் நாகலெட்சுமி, தமிழ்செல்வி, ராணி சந்திரிகா, அமுத வள்ளி, நூலகர் கவிதா மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்