முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் : கலெக்டர் கோவிந்தராஜ் வழங்கினார்

திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2017      கரூர்
Image Unavailable

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், தலைமையில் நேற்று (27.02.2017) நடைபெற்றது.

வீட்டுமனை பட்டா

 

 

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, காவல்துறை நடவடிக்கை, புதிய குடும்ப அட்டை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 307 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்றுக்கொண்டு பரிசீலித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார்.

 

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் பெருமக்களின் முகாம் மனுக்கள், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள், மாவட்ட கலெக்டர் மனுநீதி நாள் முகாம் மனுக்கள், மாவட்ட உயர் அலுவலர்களின் மனுநீதி நாள் முகாம் மனுக்கள், மக்களைத்தேடி வருவாய்த்துறை அம்மா திட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆகியவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் ஓவியம், பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 15 மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ரூ.32,100 மதிப்பில் காசோலையும், 10 மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு உதவி உபகரணங்களும், வருவாய் துறையின் சார்பாக 21 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு உடல் ஊனமுற்றோர் உதவித்தொகையினையும், சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பாக 5 பயனாளிகளுக்கு ரூ.7,000 மதிப்பிலான உலமாக்கள் கல்வி உதவித்தொகையினையும், திருமண உதவித்தொகை 1 பயனாளிக்கு ரூ.2000 மதிப்பிலும், 3 பயனாளிகளுக்கு உலமாக்கள் நலவாரிய உறுப்பினர் புதிய அடையாள அட்டையினையும், ஈமச்சடங்கு மற்றும் இயற்கை மரண உதவித்தொகை 1 பயனாளிக்கு ரூ.17,000 மதிப்பிலும், 1 பயனாளிக்கு ரூ.500 மதிப்பிலான கண்கண்ணாடி உதவித்தொகையினையும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 31 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2,64,000 மதிப்பில் ஊக்கத்தொகையினையும் மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கோமகன், மக்கள் குறைதீர்க்கும் தனித்துணை கலெக்டர் ஜான்சிராணி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்