முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனுஷ்கோடி பகுதியில் மீன்பிடி வலையில் சிக்கிய இரண்டு பெரிய கடல் ஆமைகள்

புதன்கிழமை, 1 மார்ச் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்,மார்,-  மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கரைவலை மீன்பிடி வலையில் நேற்று சிக்கிய இரண்டு பெரிய கடல் ஆமைகளை வலையிலிருந்து உயிருடன் மீட்டு மீண்டும் கடலில் மீனவர்களும்,வனச்சரக அதிகாரிகளும் திரும்ப விட்டனர். 
  மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பாறைகளில் டால்பின், ஓங்கி மீன்,கடல்பசு,கடல்ஆமை,கடல்பன்றி,கடல் பாம்பு உள்பட நூற்றுக்காணக்கான அரியவகையான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.இந்த வகையான உயிரினங்கள் இறை தேடி அப்பகுதியிலிருந்து வெளி வரும்போது மீன்பிடி வலைகளில் சிக்கி அதை மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்து விடுகின்றனர்.

இந்த நிலையில் தனுஷ்கோடி பகுதியில் நேற்று அதிகாலையில் கரைவலை மீன்பிடி முறையில் மீனவர்கள் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது மீன்பிடி வலையில் அதிகமான மீன்கள் சிக்கியதால் வலைகளை கடலிலிருந்து மீனவர்கள் கரையோரமாக இழுக்கும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது அனைத்து வலைகளையும் முழுமையாக இழுத்து மீன்களை பார்க்கும்போது அதில் 30 கிலோவுக்கு மேலாக எடையளவு கொண்ட இரண்டு பெரிய கடல் ஆமை சிக்கியிருந்தது.இதையறிந்த அப்பகுதி மீனர்கள் மண்டபம் வனச்சரக அதிகாரிகளிடன் தகவல் தெரிவித்தனர்.அதன் பேரில் அப்பகுதிக்கு வந்த வனச்சரக வேட்டை தடுப்பு காவலர்கள் மீன்பிடி வலையில் சிக்கிய பெரிய கடல் ஆமைகளை  உயிருடன் கைப்பற்றினர்.பின்னர் மீனவர்கள் உதவியுடன் கடல் ஆமைகளை திரும்ப கடலில் விட்டனர்.        

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்