முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சாவூர் மாவட்டம், பூக்கொல்லை விளையாட்டு மைதானத்தில் ஜல்லிக்கட்டு : கலெக்டர் அண்ணாதுரை துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 3 மார்ச் 2017      தஞ்சாவூர்
Image Unavailable

தஞ்சாவூர் மாவட்டம், நீலகிரி தெற்கு தோட்டம் ஊராட்சி, பூக்கொல்லை விளையாட்டு மைதானத்தில் ஜல்லிக்கட்டினை மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, நேற்று (03.03.2017) துவக்கி வைத்தார்.

 

ஜல்லிக்கட்டு

 

ஜல்லிகட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தெரிவித்ததாவது, தஞ்சாவூர் மாவட்டம், நீலகிரி தெற்கு தோட்டம் ஊராட்சி, பூக்கொல்லை விளையாட்டு மைதானத்தில் தமிழர்களின் பாரம்பரியான விளையாட்டான ஜல்லிக்கட்டு விழா நடைபெற்று வருகிறது. இதில் 600 காளைகளும், 150 காளை பிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். ஜல்லிக்கட்டு காளையினை முறையாக கால்நடைத்துறை மூலம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தகுதியுடைய காளைகள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றது. கால்நடைத்துறையின் மூலம் காளைகளுக்கு தனியாக ஆம்புலென்ஸ் வசதி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வீரர்களுக்கு மருத்துவத் துறையின் மூலம் முறையான பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர். பாதுகாப்பு பணிகளில் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். மாலை 3.00மணிக்கு இப்போட்டியானது நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உச்ச நீதி மன்ற வழிகாட்டுதலின்படி அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தெரிவித்தார்.

முன்னதாக விளையாட்டில் ஈடுபடும் காளைகளுக்கு எவ்வித ஊறும் செய்ய மாட்டோம் என்றும், அரசு விதிமுறைகளுக்குட்பட்டு விளையாடுவோம் என்றும், சிறந்த நெறிமுறைகளை பின்பற்றுவோம் என்றும் மாவட்ட கலெக்டர் தலைமையில் காளை பிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இவ்விழாவில் தஞ்சாவூர் சட்ட மன்ற உறுப்பினர் எம்.ரெங்கசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.மகேஷ், இ.கா.ப., கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கண்ணன், திட்ட இயக்குநர் மந்திராசலம், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், கால்நடைத்துறை இணை இயக்குநர் மாசிலாமணி, மற்றும் ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்