முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் ரூ.1 லட்சம் சிப்பிகுளம் வியாகுல அன்னை ஆலயத்திற்கு நிதி

வெள்ளிக்கிழமை, 3 மார்ச் 2017      தூத்துக்குடி
Image Unavailable

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் சிப்பிகுளம் வியாகுல அன்னை ஆலயத்திற்கு ரூ.1 லட்சம்  நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு விதமான சமுதாய பணிகளை மேற்கொண்டு வருகிறது. நகர் மற்றும் புறநகர் பகுதிகளில்உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, கல்வி, அடிப்படை வசதிகள், கட்டிங்கள் என பல்வேறு வழிகளில்  இப்பணிகளை ஸ்டெர்லைட் நிறுவனம் செய்துவருகிறது.இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் அருகேயுள்ள சிப்பிகுளத்தில் உள்ள வியாகுல அன்னை ஆலயத்திற்கான உள்கட்டமைப்பு பணிகளைசிறப்பாக மேற்கொள்ள நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் நிறுவன துணை தலைவர் முருகேஷ்வரன் ரூ. ஒரு லட்சத்திற்கானகாசோலையை வழங்கினார். இதனை சிப்பிகுளம் வியாகுல  அன்னை ஆலய பங்குதந்தை ராஜா ரொட்ரிக்ஸ் பெற்றுக்கொண்டார்.இந்நிகழ்ச்சியின் போது ஸ்டெர்லைட் நிறுவன மக்கள் தொடர்பு அதிகாரி இசக்கியப்பன் உள்ளிட்டவர்கள் இருந்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்