முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கோட்டை ஊhட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் காணொளி மூலம் திறந்த வைத்தார்.

புதன்கிழமை, 8 மார்ச் 2017      திண்டுக்கல்
Image Unavailable

 வத்தலக்குண்டு -தமிழக முதல்வராக சின்னம்மா ஆசியுடன் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் முன்னிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிலக்கோட்டை ஊhட்சி ஒன்றிய அலுவலக 2.50 கோடி மதிப்புள்ள புதிய  கட்டிடத்தை காணொளி மூலம் திறந்த வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊhட்சி ஒன்றிய அலுவலக 2.50 கோடி மதிப்புள்ள புதிய  கட்டிடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி மூலம் திறந்த வைத்தார். அதன் தொடர்ச்சியாக தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வினய் மாவட்ட கழக செயலாளர் மருதராஜ், திண்டுக்கல் எம்.பி.உதயகுமார், நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தங்கதுரை ஆகியோர் முன்னிலையில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய புதிய கட்டிடத்தை திறப்பு விழாவிற்கு பின்பு பூஜை நடைபெற்றது. நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் யாகப்பன் குத்துவிளக்கேற்றி பூஜை செய்தார்.

துணை தலைவர் சீனிவாசன், நிலக்கோட்டை நகர செயலாளர் சேகர், அம்மையநாயக்கனூர் நகர செயலாளர் தண்டபாணி, நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அலெக்ஸ்சாண்டர், ஊராட்சி ஒன்றியம் கிராம ஊராட்சி ஆணையாளர் செல்வராஜ், யூனியன் பொறியாளர்கள் ஹரிரமணன், தேவி, மற்றும் ஊராட்சி ஒன்றிய அனைத்து அதிகாரிகள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் வாசிமலை, பள்ளபட்டி ராஜா, எத்திலோடுராஜா, ஊராட்சி கழக செயலாளர்கள் சேசுராஜ் மற்றும் அதிமுகவினர்கள் 24 ஊராட்சிகளை சேர்ந்த செயலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்