எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாத்து அவற்றை மேம்படுத்தும் தமிழ்நாடு அரசின் குடிமராமத்து திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரிகளை புனரமைக்கும் பணிகளை நேற்று(13.03.2017) வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டம், அனந்தாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அனந்தாபுரம் ஏரியில் குடிமராமத்து திட்டப்பணிகளை பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.நீலோபர் கபில் துவக்கி வைத்தனர்.இந்த துவக்க விழாவில் கலெக்டர் சி.அ.ராமன், தலைமை தாங்கினார்.இந்நிகழ்ச்சியில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-இன்றைய நவீன உலகத்தில் பல்வேறு காரணங்களால் சுற்றுசூழல் பாதிப்படைந்து வருகிறது. இதனால் மழைப்பொழிவு குறைவாக கிடைக்கப்பெறுவதால் நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆகையால் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாத்து அவற்றை மேம்படுத்தும் உயரிய நோக்கத்தோடு மறைந்த தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களின் வழிகாட்டுதலின் படி கடந்த 2016-17 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் குடிமராமத்து திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாய அமைப்புகளோடு இணைந்து அவர்களின் பங்களிப்போடு நீர்நிலைகளை புனரமைத்து, விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதே அரசின் நோக்கமாகும். இந்த திட்டம் வெற்றியாக முடிவடைந்தல் நீர்தேக்கங்கள் உருவாக அதன்மூலம் விவசாயம் செய்ய நீர் வளம் பெரும். குடிமராமத்து திட்டத்தில் வரத்து வாய்க்கால் மற்றும் கால்வாய்கள், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகள் ஆகியவற்றை புனரமைத்தல், பலப்படுத்துதல் மற்றும் கலங்குகள், மதகுகளை மறுகட்டுமானம் செய்தல், நீர்வழிகளில் அடைந்திருக்கும் செடிகளை அகற்றுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளபட உள்ளன.
இப்பணிகளில் ரூ.10.00 இலட்சத்திற்கும் குறைவான மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் பணிகள் விவசாய சங்கங்கள், பாசன சபைகள், ஆயக்கட்டுதாரர் மற்றும் ஆயகட்டுதாரர்களின் தொகுப்பின் மூலம் நேரடி நியமன அடிப்படையில் அவர்களாலேயே மேற்கொள்ளப்படும். இப்பணிகள் பொதுப்பணித்துறையால் திட்டமிடப்பட்டு பொதுமக்களால் செயல்படுத்தப்படும் பணிகள் பொதுப்பணித்துறையால் கண்காணிக்கப்படும். ரூ.10.00 இலட்சத்திற்கு மேற்பட்ட பணிகள், நீர்வள ஆதாரத்துறையின் மூலம் நடைமுறையில் உள்ள ஒப்பந்தப்புள்ளி விதிமுறைகளின்படி செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்கான மதிப்பீட்டுத் தொகையில் 10 சதவீதத்திற்கான தொகையை பணியினை செயல்படுத்த உள்ள விவசாயிகள் கூட்டமைப்பு அல்லது ஆயக்கட்டுதாரர்கள் அவர்களிடமிருந்து பங்களிப்பாக பணியாட்கள் மூலமான உழைப்பு அல்லது கட்டுமான பொருட்கள் அல்லது ரொக்கப்பணம் இவற்றில் ஏதேனும் ஒரு வடிவத்தில் பெறப்படும். மீதமுள்ள 90 சதவீத தொகையுடன் இப்பணியானது நியமன அடிப்படையில் நீர்வள ஆதாரத்துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள 34 ஏரிகளை புனரமைக்க ரூ.300.00 இலட்சத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டம், அனந்தாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அனந்தாபுரம் ஏரியும் ஒன்றாகும். இத்திட்டத்தின் மூலம் இந்த ஏரியானது ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட உள்ளது. மேலும், வரும் நிதியாண்டில் (2017-2018) ரூ.300.00 கோடி மதிப்பீட்டில் தமிழகம் முழுவதும் இரண்டாவது கட்டமாக இத்திட்டம் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அப்பொழுது இந்த திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் 100 ஏரிகள் ரூ.1200 இலட்சங்களில் புனரமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருங்காலத்தில் விவசாய நிலங்களை வைத்துள்ள விவசாயிகளுக்குதான் சமுதாயத்தில் சிறப்பு அந்தஸ்து கிடைக்கும். ஆகவே விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டுள்ள மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் அரசு தொடர்ந்து விவசாயிகளுக்கு பயனுள்ள திட்டங்களை செயல்படுத்தி அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். ஆகவே விவசாயிகள், கிராமமக்கள் இத்திட்டத்தின் நோக்கத்தை உணர்ந்து உறுதுணையாக இருக்க வேண்டுமென்று பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார். இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் என்.ஜி.பார்த்திபன் (சோளிங்கர்), சு.ரவி (அரக்கோணம்), கண்காணிப்பு பொறியாளர் (நீர்வளம்) கரூர் இராமகிருஷ்ணன், செயற் பொறியாளர் அன்பரசு, உதவி செயற் பொறியளர்கள் கார்த்திகேயன், இரமேஷ், விஸ்வநாதன், மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தி.மலை கோவிலில் பரபரப்பு: போலீசார் - ஆந்திர பக்தர்களிடையே வாக்குவாதம்
06 Dec 2025திருவண்ணாமலை கோவிலில் போலீசார் மற்றும் ஆந்திர பக்தர்களிடையே மோதல் ஏற்பட்டது.
-
குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்களை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
06 Dec 2025சென்னை, சாலைகளில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணி: 99.81 சதவீதம் பேருக்கு படிவங்கள் விநியோகம்
06 Dec 2025சென்னை, தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிக்கு 99.81 சதவீதம் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு வடிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை உயர்வு
06 Dec 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.96,320-க்கு விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-12-2025.
06 Dec 2025 -
இந்துக்கள் விழித்தெழும் நாள் ஒன்று வரும்: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆந்திர துணை முதல்வர் கருத்து
06 Dec 2025சென்னை, இந்துக்கள் விழித்தெழும் நாள் ஒன்று வரும் என்று திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கருத்து தெரிவித்துள்ளார்.
-
ஒரேநாளில் இண்டிகோ 1,000 விமானங்கள் ரத்து
06 Dec 2025டெல்லி, ஒரேநாளில் 1,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு இண்டிகோ நிறுவனம் திணறி வருகிறது.
-
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு: காங்., மூத்த தலைவருடன் விஜய்யின் தந்தை சந்திப்பு
06 Dec 2025திருச்சி, காங்கிரஸ் மூத்த தலைவருடன் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் திடீர் சந்தித்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் ஆஸி., 511 ரன்களுக்கு ஆல்-அவுட்
06 Dec 2025பிரிஸ்பேன் : ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 511 ரன்களுக்கு ஆல்-அவுடானது.
-
2 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி
06 Dec 2025இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
-
காதலியுடன் ஆடம்பரமாக வாழ திருடிய வாலிபர் உள்பட 2 பேர் கைது
06 Dec 2025பெங்களூரு, காதலியுடன் ஆடம்பரமாக வாழவே திருடிய வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் 2 பேர் விலகல்
06 Dec 2025கேப்டவுன் : இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர்களான டோனி டி சோர்ஜி மற்றும் குவேனா மபாகா விலகியுள்ளனர்.
-
டெல்லி காவல் நிலையத்தில் அன்புமணி மீது ராமதாஸ் தரப்பு புகார்
06 Dec 2025புதுடெல்லி, டெல்லி பாராளுமன்ற சாலை காவல் நிலையத்தில் அன்புமணி மீது ராமதாஸ் தரப்பில் ஜி.கே.மணி புகார் அளித்துள்ளார்.
-
வக்ப் உரிமையை காக்கக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்
06 Dec 2025சென்னை : வக்ப் மற்றும் வழிபாட்டு உரிமையை காக்க சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 265 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
06 Dec 2025சென்னை, முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் சமூக நல்லிணக்கத்துடன் வாழும் 10 கிராம ஊராட்சிகளுக்கு விருது, கல்வி உதவித்தொகை, சுயதொழில் புரிந்திட கடனுதவி என ரூ.26
-
திருச்செந்தூரில் தீடீரென 75 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்...!
06 Dec 2025தூத்துக்குடி : திருச்செந்தூரில் திடீரென 75 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
மேலமடை சந்திப்பு மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
06 Dec 2025சென்னை, இன்று திறந்து வைக்கப்படவுள்ள மதுரை - சிவகங்கை மாவட்டங்களை இணைக்கும் மேலமடை சந்திப்பு சாலை மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயரை சூட்டிப் பெருமையடைகிறோ
-
புதிய விதிகளை ஏற்க மறுப்பு: மஸ்கின் எக்ஸ் நிறுவனத்துக்கு 1,250 கோடி ரூபாய் அபராதம்
06 Dec 2025லண்டன், எலான் மஸ்க் எக்ஸ் வலைத்தள நிறுவனத்துக்கு ரூ.1,250 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
-
தெலுங்கானாவில் பரபரப்பு: 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
06 Dec 2025ஐதராபாத், தெலுங்கானாவில் 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
விஜய் - சக்கரவர்த்தி சந்திப்பு: செல்வப்பெருந்தகை கருத்து
06 Dec 2025சென்னை, விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது குறித்து தெரியாது என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
-
மேகதாது அணை திட்ட அறிக்கை: திருப்பி அனுப்பியது காவிரி மேலாண்மை ஆணையம்
06 Dec 2025தஞ்சாவூர், காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்லணையை காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் பார்வையிட்டு ஆய்வு செய்த நிலையில், மேகதாது அணை திட்ட அறிக்கையை மத்
-
இம்மாத இறுதியில் மீண்டும் ஒரு புயல் சின்னம் உருவாக வாய்ப்பு: தமிழகத்திற்கு அதிக மழை பொழிவு இருக்கும்
06 Dec 2025சென்னை, வடகிழக்கு பருவமழை காலத்தின் 3-வது புயல் சின்னம் தெற்கு வங்கக்கடலில் 23-ம் தேதிக்கு பிறகு உருவாவதற்கான சாதகமான சூழல் நிலவி வருகிறது என்று தனியார் வானிலை ஆய்வாளர்
-
வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் : துணை முதல்வர் உதயநிதி நம்பிக்கை
06 Dec 2025சென்னை : வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
-
நாகர்கோவில், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
06 Dec 2025சென்னை, நாகர்கோவில், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
இண்டிகோ விமான சேவை பாதிப்பு: விமான டிக்கெட் விலை கடும் உயர்வு
06 Dec 2025டெல்லி, இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டதையடுத்து விமான டிக்கெட்டின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது.சென்னையில் இருந்து கோவைக்கு விமான டிக்கெட் விலை வழக்கமாக ரூ.5 ஆயிரத்து


