எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாத்து அவற்றை மேம்படுத்தும் தமிழ்நாடு அரசின் குடிமராமத்து திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரிகளை புனரமைக்கும் பணிகளை நேற்று(13.03.2017) வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டம், அனந்தாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அனந்தாபுரம் ஏரியில் குடிமராமத்து திட்டப்பணிகளை பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.நீலோபர் கபில் துவக்கி வைத்தனர்.இந்த துவக்க விழாவில் கலெக்டர் சி.அ.ராமன், தலைமை தாங்கினார்.இந்நிகழ்ச்சியில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-இன்றைய நவீன உலகத்தில் பல்வேறு காரணங்களால் சுற்றுசூழல் பாதிப்படைந்து வருகிறது. இதனால் மழைப்பொழிவு குறைவாக கிடைக்கப்பெறுவதால் நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆகையால் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாத்து அவற்றை மேம்படுத்தும் உயரிய நோக்கத்தோடு மறைந்த தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களின் வழிகாட்டுதலின் படி கடந்த 2016-17 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் குடிமராமத்து திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாய அமைப்புகளோடு இணைந்து அவர்களின் பங்களிப்போடு நீர்நிலைகளை புனரமைத்து, விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதே அரசின் நோக்கமாகும். இந்த திட்டம் வெற்றியாக முடிவடைந்தல் நீர்தேக்கங்கள் உருவாக அதன்மூலம் விவசாயம் செய்ய நீர் வளம் பெரும். குடிமராமத்து திட்டத்தில் வரத்து வாய்க்கால் மற்றும் கால்வாய்கள், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகள் ஆகியவற்றை புனரமைத்தல், பலப்படுத்துதல் மற்றும் கலங்குகள், மதகுகளை மறுகட்டுமானம் செய்தல், நீர்வழிகளில் அடைந்திருக்கும் செடிகளை அகற்றுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளபட உள்ளன.
இப்பணிகளில் ரூ.10.00 இலட்சத்திற்கும் குறைவான மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் பணிகள் விவசாய சங்கங்கள், பாசன சபைகள், ஆயக்கட்டுதாரர் மற்றும் ஆயகட்டுதாரர்களின் தொகுப்பின் மூலம் நேரடி நியமன அடிப்படையில் அவர்களாலேயே மேற்கொள்ளப்படும். இப்பணிகள் பொதுப்பணித்துறையால் திட்டமிடப்பட்டு பொதுமக்களால் செயல்படுத்தப்படும் பணிகள் பொதுப்பணித்துறையால் கண்காணிக்கப்படும். ரூ.10.00 இலட்சத்திற்கு மேற்பட்ட பணிகள், நீர்வள ஆதாரத்துறையின் மூலம் நடைமுறையில் உள்ள ஒப்பந்தப்புள்ளி விதிமுறைகளின்படி செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்கான மதிப்பீட்டுத் தொகையில் 10 சதவீதத்திற்கான தொகையை பணியினை செயல்படுத்த உள்ள விவசாயிகள் கூட்டமைப்பு அல்லது ஆயக்கட்டுதாரர்கள் அவர்களிடமிருந்து பங்களிப்பாக பணியாட்கள் மூலமான உழைப்பு அல்லது கட்டுமான பொருட்கள் அல்லது ரொக்கப்பணம் இவற்றில் ஏதேனும் ஒரு வடிவத்தில் பெறப்படும். மீதமுள்ள 90 சதவீத தொகையுடன் இப்பணியானது நியமன அடிப்படையில் நீர்வள ஆதாரத்துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள 34 ஏரிகளை புனரமைக்க ரூ.300.00 இலட்சத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டம், அனந்தாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அனந்தாபுரம் ஏரியும் ஒன்றாகும். இத்திட்டத்தின் மூலம் இந்த ஏரியானது ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட உள்ளது. மேலும், வரும் நிதியாண்டில் (2017-2018) ரூ.300.00 கோடி மதிப்பீட்டில் தமிழகம் முழுவதும் இரண்டாவது கட்டமாக இத்திட்டம் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அப்பொழுது இந்த திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் 100 ஏரிகள் ரூ.1200 இலட்சங்களில் புனரமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருங்காலத்தில் விவசாய நிலங்களை வைத்துள்ள விவசாயிகளுக்குதான் சமுதாயத்தில் சிறப்பு அந்தஸ்து கிடைக்கும். ஆகவே விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டுள்ள மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் அரசு தொடர்ந்து விவசாயிகளுக்கு பயனுள்ள திட்டங்களை செயல்படுத்தி அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். ஆகவே விவசாயிகள், கிராமமக்கள் இத்திட்டத்தின் நோக்கத்தை உணர்ந்து உறுதுணையாக இருக்க வேண்டுமென்று பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார். இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் என்.ஜி.பார்த்திபன் (சோளிங்கர்), சு.ரவி (அரக்கோணம்), கண்காணிப்பு பொறியாளர் (நீர்வளம்) கரூர் இராமகிருஷ்ணன், செயற் பொறியாளர் அன்பரசு, உதவி செயற் பொறியளர்கள் கார்த்திகேயன், இரமேஷ், விஸ்வநாதன், மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 5 days ago |
-
மத நம்பிக்கையில் தலையிட முடியாது: கண்டதேவி தேரோட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
02 Jul 2025மதுரை : ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பழக்க வழக்கம், மத நம்பிக்கை உள்ளது.
-
34 பேரூராட்சிகள் தரம் உயர்வு: தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு
02 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.
-
காவலாளி அஜித்குமார் மரணம்: த.வெ.க. சார்பிலான ஆர்ப்பாட்டம் வரும் 6-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
02 Jul 2025சென்னை : காவலாளி அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் இன்று த.வெ.க. சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ள நிலையில், த.வெ.க.
-
தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி பிரச்சனை: மத்தியஸ்தரை நியமித்தது ஐகோர்ட்
02 Jul 2025சென்னை : தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி இடையேயான பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கோவிந்தராஜை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர்
-
திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு கோவிட் தடுப்பூசி காரணமில்லை : மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்
02 Jul 2025புதுடெல்லி : கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும், மாரடைப்பு காரணமாக ஏற்படும் திடீர் மரணங்களின் அதிகரிப்புக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும
-
பக்தியின் பெயரால் பகல்வேஷம் போடுவர்களால் தி.மு.க., அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை : திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
02 Jul 2025சென்னை : கேலி செய்பவர்களை குறித்து கவலையில்லை என்றும், பக்தியின் பெயரால் பகல்வேஷம் போடுவர்களால் தி.மு.க., அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் சென்னையில்
-
குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பகுதியில் சிறப்பாக செயல்படுமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்
02 Jul 2025திருவாரூர், குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பகுதியை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக பணிபுரிய அறிவுறுத்தப் பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து
-
பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கட்சியிலிருந்து நீக்கம் : அன்புமணி நடவடிக்கை
02 Jul 2025சென்னை : பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
-
பரமக்குடி–ராமநாதபுரம் 4 வழிச்சாலை திட்டம்: பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். நன்றி
02 Jul 2025சென்னை : ரூ. 1,853 கோடி மதிப்பில் தொடங்கப்பட உள்ள பரமக்குடி- ராமநாதபுரம் இடையிலான நான்கு வழிச்சாலை திட்டத்தை அ.தி.மு.க.
-
காசாவில் 60 நாள் போர் நிறுத்தம்; இஸ்ரேல் பிரதமர் ஒப்புதல்: ட்ரம்ப்
02 Jul 2025வாஷிங்டன் : காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
-
5 ஆண்டுகளும் நான்தான் முதல்வர்: சித்தராமையா திட்டவட்டம்
02 Jul 2025பெங்களூரு : கர்நாடக முதலமைச்சராக 5 ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்வேன் என்று சித்தராமையா உறுதியாக தெரிவித்தார்.
-
கோவில் காவலர் மரண வழக்கு: திருப்புவனத்தில் மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை
02 Jul 2025திருப்புவனம் : காவலர்கள் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமார் வழக்கு குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றம் நியமித்த மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் திருப்புவனத்தில் வ
-
கனமழை, திடீர் வெள்ளப்பெருக்கு: இமாச்சலப்பிரதேசத்தில் 10 பேர் பலி
02 Jul 2025சிம்லா : இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 32 மணி நேரத்தில 10 பேர் உயிரிழந்தனர், 34 பேர் காண
-
தமிழகத்தில் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு
02 Jul 2025சென்னை, தமிழகத்தில் வரும் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சர்வதேச அணுசக்தி அமைப்புடன் ஒத்துழைப்பு இடைநிறுத்தம்: ஈரான்
02 Jul 2025டெஹ்ரான் : ஐ.நா.வின் அணுசக்தி காண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி அமைப்பு உடனான ஒத்துழைப்பை இடைநிறுத்தம் செய்து ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியன் உத்தரவிட்டுள்ளார்.
-
தேவையில்லாமல் விசாரணை கைதிகளை துன்புறுத்தக்கூடாது : காவலர்களுக்கு ஏ.டி.ஜி.பி.டேவிட்சன் தேவாசீர்வாதம் அறிவுறுத்தல்
02 Jul 2025சென்னை : குடும்பமாக செல்வோரிடம் வாகன தணிக்கை என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்றும் விசாரணை கைதிகளை காவலர்கள் தேவையில்லாமல் துன்புறுத்தக்கூடாது என்றும் ஏ.டி.ஜி.
-
தைரியமா இருங்க, நாங்க இருக்கோம்: அஜித்குமார் குடும்பத்தாரிடம் எடப்பாடி பழனிசாமி ஆறுதல்
02 Jul 2025சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவன் காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்குதலில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு செல்போன் அழைப்பு மூலம் அ.தி.மு.க.
-
ஹிந்து தலைவர்கள் கொலை வழக்கில் பயங்கரவாதிகள் இருவர் கைது
02 Jul 2025சென்னை : ஹிந்து முன்னணி அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு; அத்வானி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 'பைப் குண்டு' வைத்தது என, பல்வேறு வழக்குகளில் 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வ
-
இந்தியாவுடன் குறைந்த வரியுடன் கூடிய ஒப்பந்தம்: டிரம்ப் தகவல்
02 Jul 2025வாஷிங்டன் : இந்தியாவுடன் குறைந்த வரியுடன் கூடிய ஒப்பந்தம் செய்யப்படலாம்' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
சீமான் மீதான டி.ஐ.ஜி. வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட் தடை
02 Jul 2025மதுரை : சீமான் மீது டி.ஐ.ஜி., வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு மதுரை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
-
விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றிலேயே வெளியேறிய முன்னணி வீரர், வீராங்கனைகள்
02 Jul 2025லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றிலேயே ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் வெளியேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது
02 Jul 2025ஒகேனக்கல் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
-
2 மடங்கு கட்டணம் வசூலிக்க ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய அனுமதி
02 Jul 2025புதுடெல்லி : ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் பீக் ஹவர்ஸ் நேரங்களில் 2 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
தமிழகம் முழுவதும் காவல் தனிப்படைகள் கலைப்பு : டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவு
02 Jul 2025சென்னை : தமிழகம் முழுவதும் மாவட்டம், மாநகரங்களில் செயல்பட்டு வந்த அங்கீகரிக்கப்படாத போலீஸ் தனிப்படைகளை கலைத்து டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.