முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் இடத்தினை பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத்தொகை; கலெக்டர் வா.சம்பத், வழங்கினார்

புதன்கிழமை, 15 மார்ச் 2017      சேலம்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவிக்கப்பட்ட 2015-16 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், மாநில அளவில் இடங்களை பெற்ற பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களான பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகையினையும் நேற்று (15.03.2017) கலெக்டர் வா.சம்பத், வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் 2015-16 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், மாநில அளவில் மூன்றாம் இடங்களை பெற்ற சிறுபான்மையினர் வகுப்பைச் சார்ந்த 2 மாணவர்களுக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சார்ந்த 2 மாணவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்த 2 மாணவர்களுக்கும் என மொத்தம் சேலம் மாவட்டத்தை சார்ந்த 6 மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.15,000 ஊக்கத்தொகையினையும், தமிழக முதல்வர் அவர்களின் பாராட்டுச்சான்றிதழ்களையும் கலெக்டர் வா.சம்பத், வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செல்வம் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்