எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஊட்டி குட்செப்பர்டு சர்வதேச பள்ளியில் இந்தியாவில் அதிக உயரத்திலான கிரிக்கெட் மைதானத்தை இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் என்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
2250 மீட்டர் உயரத்தில்
நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்துள்ள எம்.பாலாடா பகுதியில் அமைந்துள்ளது குட்செப்பர்டு சர்வதேச பள்ளி. இப்பள்ளியில் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களும் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இப்பள்ளியில் கடல் மட்டத்திலிருந்து 2250 மீட்டர் உயரத்தில் அதுவும் இந்தியாவிலேயே அதிக உயரத்தில் 70 மீட்டர் பவுண்டரிகளைக் கொண்ட புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி முதல்வர் டாக்டர் பி.சி.தாமஸ் தலைமை தாங்கினார். விழாவில் இந்தியன் ஒலிம்பிக் சங்க தலைவர் என்.ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்து பேசிய பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது_
உயர்மட்ட குழு
இந்தியாவிலேயே ஊட்டி குட்செப்பர்டு சர்வதேச பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மைதானம் தான் உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தான் அறிவிக்க வேண்டும். வரும் காலங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் இங்கு ஐபிஎல் உட்பட பிற போட்டிகளை நடத்த வாய்ப்புள்ளது.
அடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெல்லும் வகையில் இந்திய அளவில் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி ஒரு உயர்மட்ட குழுவை அமைத்துள்ளார். இக்குழுவில் இந்தியா சார்பில் ஏற்கனவே ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்கள், முன்னாள் வீரர்கள், விளையாட்டு சங்க பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு மூன்று மாதங்களுக்கு ஒரு கூடி தங்களது பரிந்துரைகள் தெரிவிக்கும். பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள 28 விளையாட்டுகளை தேர்வு செய்து அதில் போட்டியிடும் வீரர்களின் திறனை மேம்படுத்தும். நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக்கில் இந்திய வீரர்களின் பங்களிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. பதக்கங்கள் குறைவாக பெற்றாலும், 8 பிரிவுகளில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். வரும் போட்டிகளில் அதை மேம்படுத்த அனைத்து வகையிலும் ஆராயப்படும்.
இந்தியாவில் 2040ம் ஆண்டு
வரும் 2020ம் ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.ஒரு இடத்தில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது குறித்து 8 ஆண்டுகளுக்கு முன்னரே முடிவு செய்து விடுவார்கள். ஆகையால் தற்போதைக்கு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதற்கான சாத்தியம் இல்லை. வரும் 2040ம் ஆண்டில் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த வாய்ப்புகள் அதிகம். அது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.
இந்திய ஒலிம்பிக் சங்க செயல்பாடுகளுக்கு உத்வேகம் அளிப்பதில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அரசு ஆதரவு அளிப்பதோடு தேவையான நிதியுதவியையும் அளித்து வருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு திறமைதான் முக்கியம். அவர்களுக்கு அரசு மூலம் தேவையான நிதியுதவி கொடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
இவ்விழாவில் பள்ளியின் நிர்வாக குழு தலைவரும் முன்னாள் நீலகிரி மாவட்ட கலெக்டருமான வி.செல்வராஜ், பள்ளியின்
போர்ட் ஆப் கவர்னர்ஸ் மற்றும் தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர்களுமான கே.எஸ்.ஸ்ரீபதி, தேவேந்திரநாத் சாரங்கி, சென்னை டிரைகின் டெக்னாலஜிஸ் நிறுவன சேர்மன் கணபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் பள்ளியின் தலைமை துணை முதல்வர் எலசம்மா தாமஸ், துணை முதல்வர்கள் ஜூலி பிரதீஸ், பிரிகேடியர் சுரேஷ் குமார், மக்கள் தொடர்பு அலுவலர் தனஞ்செயன், முதல்வரின் செயலர் மனோஜ் மற்றும் பெற்றோர்கள், மாணவ, மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவ, மாணவியர்களின் இசை நிகழ்ச்சி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.