எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஊட்டி குட்செப்பர்டு சர்வதேச பள்ளியில் இந்தியாவில் அதிக உயரத்திலான கிரிக்கெட் மைதானத்தை இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் என்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
2250 மீட்டர் உயரத்தில்
நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்துள்ள எம்.பாலாடா பகுதியில் அமைந்துள்ளது குட்செப்பர்டு சர்வதேச பள்ளி. இப்பள்ளியில் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களும் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இப்பள்ளியில் கடல் மட்டத்திலிருந்து 2250 மீட்டர் உயரத்தில் அதுவும் இந்தியாவிலேயே அதிக உயரத்தில் 70 மீட்டர் பவுண்டரிகளைக் கொண்ட புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி முதல்வர் டாக்டர் பி.சி.தாமஸ் தலைமை தாங்கினார். விழாவில் இந்தியன் ஒலிம்பிக் சங்க தலைவர் என்.ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்து பேசிய பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது_
உயர்மட்ட குழு
இந்தியாவிலேயே ஊட்டி குட்செப்பர்டு சர்வதேச பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மைதானம் தான் உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தான் அறிவிக்க வேண்டும். வரும் காலங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் இங்கு ஐபிஎல் உட்பட பிற போட்டிகளை நடத்த வாய்ப்புள்ளது.
அடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெல்லும் வகையில் இந்திய அளவில் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி ஒரு உயர்மட்ட குழுவை அமைத்துள்ளார். இக்குழுவில் இந்தியா சார்பில் ஏற்கனவே ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்கள், முன்னாள் வீரர்கள், விளையாட்டு சங்க பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு மூன்று மாதங்களுக்கு ஒரு கூடி தங்களது பரிந்துரைகள் தெரிவிக்கும். பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள 28 விளையாட்டுகளை தேர்வு செய்து அதில் போட்டியிடும் வீரர்களின் திறனை மேம்படுத்தும். நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக்கில் இந்திய வீரர்களின் பங்களிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. பதக்கங்கள் குறைவாக பெற்றாலும், 8 பிரிவுகளில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். வரும் போட்டிகளில் அதை மேம்படுத்த அனைத்து வகையிலும் ஆராயப்படும்.
இந்தியாவில் 2040ம் ஆண்டு
வரும் 2020ம் ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.ஒரு இடத்தில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது குறித்து 8 ஆண்டுகளுக்கு முன்னரே முடிவு செய்து விடுவார்கள். ஆகையால் தற்போதைக்கு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதற்கான சாத்தியம் இல்லை. வரும் 2040ம் ஆண்டில் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த வாய்ப்புகள் அதிகம். அது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.
இந்திய ஒலிம்பிக் சங்க செயல்பாடுகளுக்கு உத்வேகம் அளிப்பதில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அரசு ஆதரவு அளிப்பதோடு தேவையான நிதியுதவியையும் அளித்து வருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு திறமைதான் முக்கியம். அவர்களுக்கு அரசு மூலம் தேவையான நிதியுதவி கொடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
இவ்விழாவில் பள்ளியின் நிர்வாக குழு தலைவரும் முன்னாள் நீலகிரி மாவட்ட கலெக்டருமான வி.செல்வராஜ், பள்ளியின்
போர்ட் ஆப் கவர்னர்ஸ் மற்றும் தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர்களுமான கே.எஸ்.ஸ்ரீபதி, தேவேந்திரநாத் சாரங்கி, சென்னை டிரைகின் டெக்னாலஜிஸ் நிறுவன சேர்மன் கணபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் பள்ளியின் தலைமை துணை முதல்வர் எலசம்மா தாமஸ், துணை முதல்வர்கள் ஜூலி பிரதீஸ், பிரிகேடியர் சுரேஷ் குமார், மக்கள் தொடர்பு அலுவலர் தனஞ்செயன், முதல்வரின் செயலர் மனோஜ் மற்றும் பெற்றோர்கள், மாணவ, மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவ, மாணவியர்களின் இசை நிகழ்ச்சி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தமிழக சட்டசபை இன்று கூடுகிறது
19 Jan 2026சென்னை, பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்ட சபை இன்று கூடுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி.
-
வரும் 22-ம் தேதி அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
19 Jan 2026சென்னை, மத்திய அமைச்சரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பா.ஜ.க. பொறுப்பாளருமான பியூஸ் கோயல் நாளை (புதன்கிழமை) சென்னைக்கு வருகை தரவுள்ளார்.
-
தொடர்ந்து 4-வது ஆண்டாக சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவு
19 Jan 2026பெய்ஜிங், சீனாவில் தொடர்ந்து 4-வது ஆண்டாக குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவை கண்டுள்ளது. இது தொடர்பாக அரசு அறிவித்த பல்வேறு திட்டங்கள் பலனற்று போயின.
-
டெல்லியில் லேசான நிலநடுக்கம்
19 Jan 2026புதுடெல்லி, டெல்லியில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
நெம்மேலியில் ரூ.342.6 கோடியில் புதிதாக அமைகிறது நீர்த்தேக்கம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
19 Jan 2026செங்கல்பட்டு, 1.6 டி.எம்.சி.
-
லடாக்கில் நிலநடுக்கம்
19 Jan 2026புதுடெல்லி, லே லடாக் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
குடியரசு தினவிழா அணிவகுப்பு ஒத்திகை: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
19 Jan 2026சென்னை, குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுகிறது.
-
பா.ஜ. புதிய தேசிய தலைவரை தேர்வு செய்ய இன்று தேர்தல்
19 Jan 2026புதுடெல்லி, பா.ஜ. புதிய தேசிய தலைவரை தேர்வு செய்ய இன்று தேர்தல் நடக்கிறது. இன்றே புதிய தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகிறது.
-
பா.ம.க. எங்களுக்கே சொந்தம்: ஐகோர்ட்டில் ராமதாஸ் வழக்கு
19 Jan 2026சென்னை, பா.ம.க. கட்சி விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –19-01-2026
19 Jan 2026 -
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றம்: 71 புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம்
19 Jan 2026சென்னை, தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பு ரீதியான 71 மாவட்டங்களுக்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
19 Jan 2026சென்னை, சென்னையில் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை காலை வணிகம் தொடங்கியதும், ஆபரணத் தங்கம் விலை மற்றும் வெள்ளி விலைகள் உயர்ந்து விற்பனையானது.
-
செர்பியா நாட்டில் ஊழலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி
19 Jan 2026நோவி சாத், செர்பியா அரசில் ஊழலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி நடத்தினர்.
-
இ.பி.எஸ்.சுடன் தனியரசு சந்திப்பு?
19 Jan 2026சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு சந்தித்து பேசினார்.
-
பனையூரில் இன்று நடைபெறுகிறது 12 பேர் அடங்கிய த.வெ.க.வின் தேர்தல் அறிக்கை குழு கூட்டம்
19 Jan 2026சென்னை, பனையூரில் இன்று நடைபெறுகிறது த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு கூட்டம்.
-
அமெரிக்காவின் நலனுக்கு எது தேவையோ அதை செய்வேன்: அதிபர் டெனால்ட் ட்ரம்ப் அதிரடி முடிவு
19 Jan 2026நியூயார்க், இனி அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவின் நலனுக்கு எது தேவையோ அதைச் செய்வதில் கவனம் செலுத
-
காஸா தொடர்பான அமைதி வாரியம்: இந்தியாவுக்கு ட்ரம்ப் அழைப்பு
19 Jan 2026நியூயார்க், காஸாவில் மறுசீரமைப்புக்காகவும் அமைதியை நிலைநாட்டவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அமைதி வாரியத்தில் சேர இந்தியாவுக்கு அமெரிக்
-
பாகிஸ்தானில் பயங்கரம்: வணிக வளாக திடீர் தீ விபத்தில் 14 பேர் பலி
19 Jan 2026கராச்சி, பாகிஸ்தானில் நாட்டில் வணிக வளாக ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 14 பேர் பலியான சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30 வரை அவகாசம் நீட்டிப்பு
19 Jan 2026சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான காலஅவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்: கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்
19 Jan 2026சென்னை, செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு, கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றுவரும் கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம் கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில
-
தமிழகத்தில் விடைபெற்ற வடகிழக்கு பருவமழை இயல்பை விட 3 சதவீதம் குறைவு
19 Jan 2026சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விடைபெற்ற நிலையல் கடந்த ஆண்டை விட 3 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: விஜய்யிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் அடுக்கடுக்கான தொடர் கேள்வி: விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய திட்டம்
19 Jan 2026புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் 2-வது முறையாக நேரில் ஆஜரான த.வெ.க. தலைவர் விஜய்யிடம் தாமதமாக வர காரணம் என்ன? உள்ளிட்ட அடுக்கடுக்கான தொடர் கேள்விகளை சி.பி.ஐ.
-
நெம்மேலியில் புதிதாக அமையவுள்ள 'மாமல்லன்' ஏரி மூலம் 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
19 Jan 2026மாமல்லபுரம், 69 ஏரிகளில் இருந்து வரும் உபரிநீரை சேமித்து மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் புதிதாக அமையவுள்ள மாமல்லன் ஏரி மூலம் 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியும
-
அவதூறு வழக்கில் கோர்ட்டில் நேரில் ஆஜராகாத ராகுல் காந்தி விசாரணை ஒத்திவைப்பு
19 Jan 2026லக்னோ, பா.ஜ.க. நிர்வாகி தொடர்ந்த வழக்கில் ராகுல் காந்தி கோர்ட்டில் ஆஜராகததால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
-
ஸ்பெயின் ரயில் விபத்தில் உயிரிழப்பு 21 ஆக உயர்வு
19 Jan 2026மாட்ரிட், ஸ்பெயின் நாட்டில் நடந்த ரயில் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.


