எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை பிரிக்ஸ் பள்ளியில் இன்று மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த ஆலோசனை கருத்தரங்கை மாவட்ட கலெக்டர் அவர் தொடங்கி வைத்து பேசியதாவது,
இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள். நாட்டின் தலையெழுத்தை மாற்றும் வல்லமை மிக்கவர்கள். அதே போல் நாட்டின் விலை மதிக்க முடியாத செல்வம் எதுவென்றால் அது மனித வளம் ஆகும். இன்று கூட நாசா விஞ்ஞானிகளில் அதிகமானவர்கள் இந்தியர்கள் தான் என்பது பெருமை. மனித வளத்தை பெருக்குவது கல்வியும், பயிற்சியும் தான். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து விட்டு இங்கு வந்திருக்கும் மாணவ, மாணவியர்களுக்கு எவ்வளவு மனஅழுத்தம் இருக்கும் என தெரியும். எல்லோரும் நன்றாக படி இதுதான் வாழ்க்கை என கூறுவார்கள். அதுதான் உண்மை. ஏனென்றால் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படிப்பு ஒரு திருப்பு முனை. அதற்காக மதிப்பெண் சற்று குறைந்து விட்டதா அதற்காக கவலைபடாமல் அடுத்தது என்ன செய்யவேண்டும் என யோசிப்பதே புத்திசாலிதனம்.
இம்மாநிலத்தில் பிறக்கும் குழந்தைகள் மிகவும் அழகாக, அறிவாக, ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் என்பதற்காக கருவை வளர்ப்பதற்காக கருணை தொகை வழங்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு கிரயான்ஸ், கலர்பென்சில், அட்லஸ், நோட்டு புத்தகம், 4 செட் யூனிபார்ம், ஜாமெண்ட்ரி பாக்ஸ், கல்வி உதவி தொகை, ஊக்கத்தொகை, தங்குவதற்கு விடுதிகள், உணவு, சைக்கிள் என பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. ஒரே வகையான கலவை சாதத்தை சாப்பிடுவது மிகவும் கடினம் எனவே தான் மறைந்த முன்னாள் முதல்வர் மாணவ, மாணவியர்களுக்கு 13 வகையான உணவுகள் வழங்கினார். மேலும் தமிழக இளைஞர்கள் எந்த நாட்டு இளைஞர்களுக்கும் சளைத்தவர்களாக இருக்க கூடாது என்ற நல் எண்ணத்தில் தான் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கும் மடிக்கணினிகளை வழங்கி மகிழ்வித்தவர் தான் மறைந்த முன்னாள் முதலமைச்சர் .
மேலும் இதுநாள் வரை நாம் எப்படி இருக்க வேண்டும். என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது, யாருடன் பழக வேண்டும், யாருடன் பழக கூடாது என கூற பெற்றோர்கள் பாதுகாப்பு அரணாக இருந்தார்கள். ஆனால் இனி வரும் காலங்களில் உங்களை நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். அடுத்தவர்களை பாதுகாக்க வேண்டும். கல்லூரியில் படிக்கும் போது நல்ல ஒழுக்கத்தை கடை பிடிக்க வேண்டும். எந்த நேரத்திலும் சுய கட்டுப்பாட்டை இழந்து விட கூடாது. அதே போல பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவர்களுக்காக பாடுபட வேண்டும். எனவே ஒரு நாட்டிற்கு ஒருமாநிலத்திற்கு மிகவும் முக்கியமானது கல்வி ஆகும். அதற்கு முக்கியத்துவம் கொடுத்து தான் தமிழக அரசு கல்விக்கு வருடத்திற்கு ரூ. 21 கோடி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நமது மாநிலம் நூறாண்டுகளாக திட்டமிட்டு நமக்கு நல்ல கல்வியை வழங்கியுள்ளது என்பது நமக்கெல்லாம் பெருமை. எனவே மாணவ, மாணவியர்களிடையே பயிற்சியும் முயற்சியும் இருந்தால் வாழ்வில் முன்னேறலாம்.
எனவே தான் மாநில அரசு ஏழை, எளிய மாணவியர்கள் உதவிடும் வகையில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த மாணவ,மாணவியர்களுக்கு என்னென்ன படிப்பு படிக்கலாம், எந்ததெந்த கல்லூரிகள் உள்ளன, எந்தெந்த பாடபிரிவுகள் உள்ளன. என்ன படித்தால் எந்த வேலைக்கு போகலாம். எந்த படிப்பு படித்தால் உடனடியாக வேலை கிடைக்கும் என்று எடுத்து கூற இந்த கருத்தரங்கு நடத்தப்படுகிறது. கல்லூரிகள் மற்றும் பல்வேறு படிப்புகள் குறித்த கையேடுகளும் வழங்கப்படுகிறது. இந்த மேற்படிப்பு வேலைவாய்ப்பு சார்ந்த கருத்தரங்கின் மூலம் 6,000 பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவியர்களும், 4,000 பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர்களும் பயன் பெறுவர்.
இந்தியர்கள் அனைவரும் பிறவியிலேயே மேதைகள். எனவே பிறவி மேதைகளாகிய நாம் நல்ல ஒழுக்கத்துடன் கடுமையாக உழைத்து திட்டமிட்டு உயர்படிப்பு படித்து இந்த நாட்டிற்கு நன்மை செய்யும் நல்ல குடிமகன்களாக வர வேண்டும் என மாவட்ட கலெக்டர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் உதகை கோட்டாட்சியர் கே.கார்த்திகேயன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் து.கணேசமூர்த்தி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 6 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 6 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 6 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.