முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளை மதுபான கடைகளுக்கு விடுமுறை

வெள்ளிக்கிழமை, 7 ஏப்ரல் 2017      நாகப்பட்டினம்

மகாவீர் ஜெயந்தி தினமான எதிர்வரும் 9.04.2017 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளையும் மூடி வைக்க தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் சு. பழனிசாமி, தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட கலெக்டர் சு. பழனிசாமி, தெரிவித்துள்ளதாவது, மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு 9.04.2017 அன்று தமிழ்நாடு மதுபான கடைகள் மற்றும் பார்கள் விதிகள் 2003 விதி 12-ன் படியும், தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) 1981 விதி 25 ஆகியவையின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள் (பார்) குடு-3 உரிமம் பெற்றுள்ள மதுக்கூடங்கள் ஆகியவை உள்ளிட்ட அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

மேலும் அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபானம் விதிமுறைகளின்படி சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் சு. பழனிசாமி, எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்