முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ20 லட்சத்தில் மருத்துவமனை பிரசவபிரிவிற்கு கூடுதல் கட்டிடம்: எம்எல்ஏ ரவி, எம்பி அரி அடிக்கல் நட்டனர்

வெள்ளிக்கிழமை, 14 ஏப்ரல் 2017      வேலூர்
Image Unavailable

அரக்கோணம் அரசு மருத்துவமனை பிரசவ பிரிவிற்கு கூடுதல் கட்டிடம் சட்ட மன்ற தொகுதி நிதி ரூ20 லட்சம் மதிப்பீட்டிலான கட்டுமான பணி அடிக்கலை எம்எல்ஏ ரவி, எம்பி அரி நட்டனர். இது குறித்து மேலும் விவரம் வருமாறு. வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரின் மைய பகுதியில் அரசு மருத்துவமனை அமைந்து உள்ளது. இந்த மருத்துமனையில் உள்ள பிரசவ பகுதி போதிய இடவசதி இல்லாமல் நெருக்கடி மிகுந்து காணப்படும் காரணங்களுக்காக தலைமை மருத்துவர் ஜீவாவின் கோரிக்கைகள் மீது அரக்கோணம் சட்ட மன்ற உறுப்பினர் சு.ரவி தனது தொகுதி நிதி ரூ20 லட்சம் ஒதுக்கியதாக தெரியவருகிறது. அதன்பேரில் கூடுதல் கட்டிடம் அமைக்கும் அடிக்கல் விழா நேற்று காலை நடைபெற்றது. இந்த சிறப்புமிக்க விழாவிற்கு வந்தவர்களை ஒப்பந்தாரர் பார்த்தீபன் வரவேற்றார். நகர கூட்டுறவு வங்கி தலைவர் துரைகுப்புசாமி முன்னிலை வகித்தார். அரக்கோணம் சட்ட மன்ற உறுப்பினர் சு.ரவி தலைமை தாங்கி, எம்பி.அரியுடன் அடிக்கல்லையும் நட்டார். அப்பொழுது ஓய்வு பெற்ற தலைமை மருத்துவர் பன்னீர்செல்வம், ஆத்ம திட்டகுழு தலைவர் சாலை பழனி, கூட்டுறவு வங்கி தலைவர் துளசிராமன், கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் கிருஷ்ணமூர்த்தி, எம்.தேவராஜ், வடமாம்பாக்கம் மோகன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவரும், முருகன் பார்மஸி உரிமையாளருமான ஆர்.வெங்கட்டரமணன், ரத்த பரிசோதகர் சுந்தர்ராஜ், கண் பரிசோதகர் பார்த்தீபன், முனைவர் ஏஎல்.நாகராஜன், உள்ளிட்ட பொதுமக்கள், அதிமுக கட்சியினர், மருத்துவமனை அலுவலர்கள், ஊழியர்கள் உட்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்