எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டம், செம்மேடு, வல்வில் ஓரி அரங்கில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி சிறப்புத்திட்டம், சிறு, குறு விவசாயிகளுக்கான வாழ்வாதார மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் கொல்லிமலை மலைவாழ் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கும் விழா நேற்று (18.04.2017) நடைபெற்றது. இவ்விழாவிற்கு சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சி.சந்திரசேகரன் அவர்கள் முன்னிலை வகித்தார். இவ்விழாவிற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையேற்று கொல்லிமலை பகுதியைச் சேர்ந்த வேளாண் பெருமக்களுக்கு வேளாண் இடுபொருட்களை வழங்கி பேசும்போது தெரிவித்ததாவது,தமிழக அரசு மாநில சமச்சீர் நிதி சிறப்புத்திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு செய்து அதில் தேர்வு செய்யப்படுகின்ற பின்தங்கிய வட்டாரங்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. அந்தவகையில் நாமக்கல் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் ஆய்வுகள் நடத்தப்பட்டு 5 வட்டாரங்கள் பின்தங்கிய வட்டாரங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவற்றில் கொல்லிமலை வட்டாரம் மிகவும் பின்தங்கிய வட்டாரமாக தேர்வு செய்யப்பட்டு, இவ்வட்டாரத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் வேளாண்மைத்துறையின் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி சிறப்பு திட்டத்தின் கீழ் தன்னார்வ தொண்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு அதன்மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு பயிற்சிகளும், உதவிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. கொல்லிமலை வட்டாரத்தில் வேளாண்மைத்துறை வளர்ச்சிக்காக ஒரே மாதிரியான பல்வேறு வேளாண் வளர்ச்சித்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக இதுபோன்ற பின்தங்கிய வட்டாரத்திற்கென தனிகவனம் செலுத்தி வேளாண்மைத்துறையின் பல்வேறு தொழில் நுட்பங்கள் மற்றும் திட்டங்களை தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலமாக வழங்கி வருகின்றது. வேளாண் திட்டங்களையும், நவீன தொழில் நுட்பங்களையும் இத்தகைய விவசாயிகளுக்கு வழங்கி வருவாயை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் இதுபோன்ற தொண்டு நிறுவனங்களின் மூலமாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. கொல்லிமலையில் நன்கு விளையக்கூடிய மிளகு, காபி போன்றவற்றை அதிகம் உற்பத்தி செய்திட வேளாண் பெருமக்கள் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்திட வேண்டும். மேலும் நஞ்சில்லா விவசாயம் என்பதற்கேற்ப இயற்கை வேளாண் உற்பத்தியில் விவசாயிகள் முழுமையாக ஈடுபடவேண்டும். மண் வளத்தையும், மனித இனத்தையும் காத்திட இயற்கை வேளாண் உற்பத்தி முறையில் விவசாயிகள் ஈடுபட்டால் அதிக இலாபம் ஈட்டமுடியும். அதன்மூலம் சமூதாயத்திற்கும் நஞ்சில்லா நல்லா பொருட்களை உற்பத்தி செய்து வழங்கவும் முடியும். எனவே வேளாண் பெருமக்கள் தற்போது உள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை பெருக்குவதோடு, அதன்மூலம் நல்ல வருவாயை ஈட்டி தங்களின் வாழ்க்கைத்தரத்தையும் மேம்படுத்திக் கொள்ள முன்வரவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் மு.ஆசியா மரியம் பேசினார். மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி சிறப்புத்திட்டம், சிறு, குறு விவசாயிகளுக்கான வாழ்வாதார மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் தானம் அறக்கட்டளையின் சார்பாக கொல்லிமலை பகுதியைச் சேர்ந்த 150 விவசாயிகளுக்கு ரூ.3,80,000 மதிப்பீட்டில் காபி, மிளகு, சவுக்கு கன்றுகளையும், 12 விவசாயிகளுக்கு ரூ.40,400 மதிப்பிலான கைத்தெளிப்பான் கருவிகளையும், 10 விவசாயிகளுக்கு ரூ.20,000 மதிப்பிலான தேனி வளர்ப்பு பெட்டிகளையும், 4 விவசாயிகளுக்கு ரூ.25,000 மதிப்பிலான இயற்கை மண்புழு உரம் தயாரிப்பிற்கான உபகரணங்களையும், 5 விவசாயிகளுக்கு ரூ.6,000 மதிப்பிலான நுண் உயிர் உரங்களையும், 10 விவசாயிகளுக்கு ரூ.2,300 மதிப்பிலான மண்வள அட்டைகளையும், 1 விவசாயிக்கு ரூ.8,618 மானியத்துடன் ரூ.18,098 மதிப்பீட்டில் நீர் இறைக்கும் மோட்டார் பம்பு செட் கருவியினையும், 1 வாழவந்தி நாடு மிளகு உற்பத்தி விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவிற்கு டி.விரிடி உற்பத்தி மையம் அமைப்பதற்கு ரூ.30,347 மதிப்பிலான இடுபொருட்களையும், ஒருங்கிணைந்த மேலாண்மைத்திட்டத்தின் கீழ் 8 மகளிர் மற்றும் ஆண்கள் சுயஉதவிக்குழுக்களுக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.2.00 இலட்சம் சுழல்நிதிக்கான காசோலைகளையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 2 விவசாயிகளுக்கு ரூ.59,853 மதிப்பிலான தெளிப்பு நீர் மற்றும் சொட்டுநீர் பாசனக்கருவிகளையும், வருவாய்த்துறையின் சார்பில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 10 நபர்களுக்கு ரூ.1,05,000 இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்காக காசோலைகளையும், 5 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளையும், 6 நபர்களுக்கு பட்டா மாறுதல் உத்தரவு என இவ்விழாவில் மொத்தம் 224 பயனாளிகளுக்கு ரூ.8,86,978 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார். இவ்விழாவில் கொல்லிமலை வேளாண்மை உதவி இயக்குநர் ஆர்.சுப்பிரமணியம் அவர்கள் வரவேற்புரையாற்றினார். வேளாண்மை இணை இயக்குநர் ஆர்.கலியராஜ், சென்னை மாநில திட்டக்குழும (வேளாண்மை) துறைத்தலைவர் டாக்டர்.கே.ஆர்.ஜெகன்மோகன், மாநில திட்ட வேளாண்மை துணை இயக்குநர் பி.கணேசன். மாவட்ட திட்ட மைய செயலர் எம்.பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) லோகநாத பிரகாசம், கே.வி.கே.கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் (உழவியல் துறை) டாக்டர்.எஸ்.அழகுதுரை, டாக்டர்.சி.சர்மிளா பாரதி (தோட்டக்கலைத்துறை) கொல்லிமலை வேளாண்மை அலுவலர் டி.கௌதமன், தானம் அறக்கட்டளை திட்ட தலைவர்கள் எ.மதன்குமார் (மதுரை), எம்.சந்தானம் (சென்னை) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தானம் அறக்கட்டளை திட்ட ஒருங்கிணைப்பாளர் எ.ரமேஷ் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.