எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் சித்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒர்த் அறக்கட்டளையில் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்பு மற்றும் உரிமைகள் வழங்கிட தொழிற்நிறுவனங்களுக்கான உணர்வூட்டும் பயிற்சி வகுப்பினை கலெக்டர் சி.அ.ராமன், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசியதாவது:- தொழிற்சாலைகள் நிறைந்த வேலூர் மாவட்டத்தில் தொழிற்நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து துறைகளிலும் சம உரிமை வழங்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனடிப்படையில் தனியார் தொழிற் நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் குறைகளுக்கு ஏற்றார் போல் பணிகளை வழங்க வேண்டும். இவற்றை கடைபிடிக்க தொழிற்நிறுவனங்களுக்கு இந்த உணர்வூட்டும் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் அடுத்த ஆண்டு சிப்காட் தொழிற்பேட்டை அமைந்துள்ள பகுதிகளில் நடத்தப்படவேண்டும். இவ்வாறு நடத்தப்பட்டால் இன்னும் பல தொழிற்நிறுவனங்கள் இதுபோன்ற பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கைக்கு வித்திட முடியும். மாற்றுத்திறனாளிகள் சாதாரண பொதுமக்களை காட்டிலும் மாற்றுத் திறன் கொண்டவர்களாக உடல் ஊணத்துடன் இருப்பவர்கள். ஆனால் உடல் குறைபாடுகளை தாண்டி பல்வேறு திறமைகளை ஆரோக்கிய மனிதனை விட அதிக அளவு திறமை கொண்டவர்களாக உள்ளனர். எடுத்துக்காட்டாக சேலத்தை சார்ந்த மாற்றுத்திறனாளி இளைஞன் மாரியப்பன் தங்கப்பதக்கம் வென்று உலக அளவில் இந்தியாவின் பெருமையை நிலை நிறுத்தியதே ஆகும். தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவிகிதம் அரசு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு செய்துள்ளது. அவற்றை கண்காணிக்க அரசு முதன்மை செயலாளர் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசு புதுவாழ்வு, மகளிர் திட்டம், வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாகவும் இவர்களுக்கு அரசு பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறது. இதுபோல பல பன்னாட்டு மற்றும் பெரிய தொழிற்நிறுவனங்களும் படித்த மாற்றுத்திறனாளிகளுக்கும் உகந்த வேலைவாய்ப்பினை வழங்க நடவடிக்கை எடுத்து அவர்களின் வாழ்க்கைக்கும் உதவிட வேண்டும். ஏனென்றால் ஒரு மாற்றுத்திறனாளியை பராமரிக்க அவருடைய குடும்பமும் பெற்றோர்களும் அதிக சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்தியாவில் கடந்த 2011 புள்ளி விவரப்படி 26 மில்லியன் மாற்றுத்திறனாளிகள் இருந்தனர். அவர்களில் 45 சதவிகிதம் பேர் காது கேளாத பேச இயலாதவர்கள் ஆவர். இந்த 45 சதவிகித்தினர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்புகளை தொழிற்நிறுவனங்கள் அளிக்க வேண்டும். மாற்றுத்தினாளிகளுக்கு இந்தியாவில் ஒரு சில தொண்டு நிறுவனங்கள் பெரிய அளவில் செயல்படும் ஒரே நிறுவனமான ஒர்த் அறக்கட்டளை மாற்றுத்திறனாளிகளுக்கு பல ஆண்டுகளாக செயல்பட்டு உதவிகளையும் அவர்களுக்கு தன்னம்பிக்கையும் அளித்து வருகிறது. ஆகவே இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ள தொழிற்நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில் தன்னம்பிகையும் தனியாக சமுதாயத்தில் ஊக்கத்திறனை அளிக்கும் வகையில் அவர்களுக்கு நிறுவனத்தில் அவர்களின் திறமைக்கு ஏற்றாற்போல் பணி ஒதுக்கீடுகள் அளித்து தங்களின் சமுதாய பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெ.செந்தில்குமாரி, புதுவாழ்வு திட்ட மேலாளர் சம்பத்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குநர் கருணாகரன், ஒர்த் அறக்கட்டளை தலைமை செயல் அலுவலர் ஆர்.கார்த்திகேயன், மண்டல மேலாளர் மற்றும் ஒர்த் மாற்றுத்திறனாளி மறுவாழ்வு பள்ளி தாளாளர் செல்வி.விண்ணரசி கீதா, தொழில் மைய திட்ட மேலாளர் அசோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
தேர்தலில் போட்டியிட தடை கோரி பிரதமர் மோடிக்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
-
உங்கள் ஓட்டு உங்கள் குரல்: பிரதமர் மோடி அழைப்பு
26 Apr 2024புதுடில்லி, 13 மாநிலங்களில் நேற்று 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
சென்னைக்கு ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீர்: ஆந்திர மாநில அரசு தகவல்
26 Apr 2024ஊத்துக்கோட்டை, ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.