எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை உத்தரவின்படி நாமக்கல் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அகற்றுவது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (19.04.2017) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்து பேசும் போது தெரிவித்ததாவது, சீமைக்கருவேல மரங்களால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகின்றது. பூமிக்கடியில் 75 அடி ஆழம் வரை உள்ள நீரையும் சீமைக்கருவேல மரங்கள் உறிஞ்சி விடுகிறது. இந்த மரத்தின் விதைகள், காய்கள் எதுவும் உபயோகப்படுவதில்லை. எதற்குமே பயன்படாத இயற்கை வளத்தை பாதிக்கின்ற சீமைக்கருவேல மரங்களை அகற்றிட வேண்டுமென மாண்பமை சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிப்பகுதிகள், நகராட்சிப்பகுதிகள், பொதுப்பணித்துறை, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரத்துறை), நெடுஞ்சாலைத்துறை மற்றும் இதர இடங்களிலுள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகின்றது. மேலும் இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையில் துண்டுப்பிரசுரங்கள், ஆட்டோக்கள் மூலம் விளம்பரங்கள், தண்டோரா, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள், மனித சங்கிலி விழிப்புணர்வு பேரணி, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களும் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு தங்களது முழு பங்களிப்பை அளித்திட வேண்டுமென தொடர்ந்து கேட்டுக் கொள்ளப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட குளங்களில் 1328.230 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்களில் இதுவரை 547.500 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. ஊராட்சிப்பகுதிகளில் உள்ள குளங்களில் 1409.120 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்களில் இதுவரை 683.380 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. பொது ஃ புறம்போக்கு இடங்களில் 481.370 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்களில் இதுவரை 337.831 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. தனியார் இடங்களில் 738.592 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்களில் இதுவரை 339.490 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன.மேலும் பொதுப்பணிப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள ஏரிகளில் 3618.000 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்களில் இதுவரை 652.700 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள ஆறுகளில் 1437.000 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்களில் இதுவரை 190.140 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் 110.900 கி.மீட்டர் நீளத்தில் இருந்த சீமைக்கருவேல மரங்களில் இதுவரை 104.000 கி.மீட்டர் நீளத்திலிருந்த சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் 41.700 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்கள் இதுவரை 4.560 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. நகராட்சிப்பகுதிகளில் 148.090 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்கள் இதுவரை 131.650 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. பேரூராட்சிப் பகுதிகளில் 118.060 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்கள் இதுவரை 71.830 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன என்றார்.இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வி.சி.மாலதி, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் இரா.பிரியதர்சினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் எஸ்.பாலகிருஷ்ணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) க.சந்திரசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) லீலாகுமார் மற்றும் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
உங்கள் ஓட்டு உங்கள் குரல்: பிரதமர் மோடி அழைப்பு
26 Apr 2024புதுடில்லி, 13 மாநிலங்களில் நேற்று 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
தேர்தலில் போட்டியிட தடை கோரி பிரதமர் மோடிக்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
சென்னைக்கு ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீர்: ஆந்திர மாநில அரசு தகவல்
26 Apr 2024ஊத்துக்கோட்டை, ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
வட தமிழக உள் மாவட்டங்களில் 30-ம் தேதி வரை வெப்ப அலை வீசும்: சென்னை வானிலை மையம் தகவல்
26 Apr 2024சென்னை, வரும் 30-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ