முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே 30- முதல் படப்பிடிப்புகள் ரத்து; தியேட்டர்கள் மூடப்படும் : நடிகர் விஷால் அறிவிப்பு

வியாழக்கிழமை, 27 ஏப்ரல் 2017      சினிமா
Image Unavailable

சென்னை  - பட அதிபர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மே 30ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும். அப்போது, படப்பிடிப்புகள் நடைபெறாது; தியேட்டர்கள் மூடப்படும் என்றும் நடிகர் விஷால் அறிவித்தார்.  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோரின் கூட்டுகூட்டம் சென்னையில் நடந்தது. அதில் திரை உலக பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட்டன. திருட்டு வி.சி.டி. மற்றும் இணையதளங்களில் சட்டத்துக்கு புறம்பான பதிவிறக்கம் போன்ற பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட்டன. மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனுக்களை அளிக்க இருக்கிறோம். எங்கள் கோரிக்கைகளை 30 நாட்களுக்குள் நிறைவேற்றவேண்டும்.

அப்படி நிறைவேறாத பட்சத்தில் மே 30-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும். அதன்படி எந்த தியேட்டர்களிலும் படம் திரைக்கு வராது. படப்பிடிப்புகள் நடைபெறாது என்ற முக்கிய முடிவு எடுக்கவேண்டிய நிலைக்கு வந்திருக்கிறோம் என்று விஷால் கூறினார். கூட்டத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர்கள் கதிரேசன், ஞானவேல்ராஜா, பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அண்ணாமலை, செயலாளர் பன்னீர்செல்வம், டைரக்டர்கள் பார்த்திபன், பாண்டியராஜ், ஆர்.வி.உதயகுமார் மற்றும் ஏராளமான தயாரிப்பாளர்கள்-தியேட்டர் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்