எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 54, 495 அங்கன்வாடி முதன்மை மையங்களும், 4,995 குறு மையங்களில் 25 லட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர் என்று அமைச்சர் டாக்டர் வி.சரோஜா தெரிவித்தார்.
அமைச்சர் பேட்டி
சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் வி. சரோஜா நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, மறைந்த முதல்வர் முதலமைச்சர் அம்மா அவர்களின் வழியில் செயல்பட்டு வருகின்ற தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்று கொண்டிருக்கின்ற நல்லாட்சியில் முருங்கப்பட்டி ஊராட்சி, பிள்ளப்பநாயக்கனூர் கிராமத்தில் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கிராமத்தில் உள்ள பொதுமக்களிடம் உரையாடி இந்த கிராமத்திற்கு என்னென்ன திட்டங்கள் கொண்டு வரப்போகிறோம் என்பது குறித்து கிராமசபைக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது. இந்த ஊராட்சியில் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டும் இன்னும் சில திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. முருங்கப்பட்டி ஊராட்சியில் மட்டும் 2016 முதல் 2017- 18- வரை சுமார் ரூ.43.00 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட இருக்கின்றது. இந்த கிராமத்தில் 949 மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் ஒரு அங்கன்வாடி மையம், ஒரு சத்துணவு மையம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இக்கிராமத்தில் தனிநபர் இல்லக்கழிப்பிடம் அனைவரும் கட்டியிருப்பது பாராட்டுக்குரியது. இக்கிராம மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துபவர்களாகவும், நீர் பற்றாக்குறை பற்றிய அதிகம் விழிப்புணர்வு உள்ளவர்களாகவும் திகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஒரு மேல்நிலைத்தொட்டியும், ஒரு தரைத்தளத்தொட்டியும், கைப்பம்பும் இருந்தாலும் கூட மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். சுத்தம் சுகாதாரமாகவும் இக்கிராம மக்கள் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். இந்த நிலையில் உங்களைச் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
தமிழகத்தில் அங்கன்வாடி மையங்கள் 6 மாதம் முதல் 5 வயது வரை 54, 495 அங்கன்வாடி முதன்மை மையங்களும், 4,995 குறு மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 25 இலட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். அந்த அங்கன் வாடி மையத்தில் அந்தந்த கிராமங்களிலுள்ள கருவுற்ற தாய்மார்களும் பதிவு செய்ய அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அந்த கிராமத்திலுள்ள வளர் இளம் பெண்களும் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. அங்கன்வாடி மையம் என்பது அனைத்து திட்டங்களுக்கும் ஒரு மையமான அங்கமாக திகழ்ந்து வருகின்றது.
தாலிக்கு தங்கம்; வழங்கும் திட்டத்தில் 2011 முதல் இதுவரை 5 வகையான திருமண நிதியுதவி திட்டங்களின் மூலம் 8,79,232 பயனாளிகளுக்கு ரூ.2960.70 கோடி திருமண நிதியுதவியும், 3505.50 கிலோ தங்கமும் என மொத்தம் 3951.23 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 16.02.2017 அன்று 5 முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டுள்ளார்கள். முதலாவதாக பணியிடங்களுக்கு செல்லும் மகளிருக்கு 50 சதவிகித மானியத்தில் அம்மா இருசக்கர வாகனம் திட்டத்திற்கு முதல் கையொப்பம் இட்டு ஆண்டிற்கு ரூ.200.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ளார்கள். கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்டு வந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி ரூ.12,0000 யிலிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தி வழங்க ஆணையிட்டுருந்தார்கள். தமிழ்நாட்டில் மேலும் 500 மதுபானக்கடைகளை மூடுவதற்கான ஆணையிலும் கையொப்பமிட்டுள்ளார்கள்.நீர் நிலைகளை பராமரிப்பதற்கு குடி பராமத்துப்பணிகளை மேற்கொள்ள ஆணையிட்டு முதற்கட்டமாக ரூ.100 கோடி நிதியினையும் ஒதுக்கீடு செய்ததோடு அதன் பின்னர் ரூ.300 கோடி நிதியினையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ளார்கள். இந்நிதியின் மூலம் நீர் நிலைகள் பலப்படுத்தப்பட்டு மழை நீர் சேகரிக்கப்பட்டு அதனைச்சுற்றிலுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் பெருகுவதோடு விவசாயிகளே நீர் நிலைகளை பராமரித்து பாதுகாத்து அதன்மூலம் விவசாயம் செழிப்பாக மேற்கொண்டு அவர்களின் வாழ்க்கைத்தரத்தினையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்வதற்கு இக்குடிமராமத்துப்பணி திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இத்திட்டத்தினை கொண்டு வந்துள்ளார்கள். இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாக இத்திட்டம் விளங்கி வருகின்றது. வறட்சிக்கே நிவாரணம் கொடுத்த முதல் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து கொண்டிருக்கின்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் துறைக்கு 2017-18 ஆம் நிதியாண்டிற்கு ரூ.476 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். 1992 –ல் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக துறையை ஏற்படுத்தி மாற்றுத்திறனாளிகளுக்கொன தனி கொள்கையும் வகுத்து தமிழகத்தில் இன்று 11 இலட்சத்து 79 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளும் பயனடைகின்ற வகையிலும் ஒவ்வொரு திட்டத்திலும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுகின்றனர். இவ்வாறு சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர்.வி.சரோஜா அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 12 hours ago |
ஆனியன்ப்ரை4 days 11 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
உலக செவிலியர் தினம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
12 May 2024சென்னை : உலக செவிலியர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
வார இறுதி மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட நியூயார்க்கில் இந்திய தூதரகம் ஆண்டு முழுவதும் இயங்கும்
12 May 2024நியூயார்க் : வார இறுதி நாட்கள் மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட ஆண்டு முழுவதும் இந்திய தூதரகம் திறந்திருக்கும் என்றும், அனைத்து விடுமுறை நாட்களிலும் பிற்பகல் 2 மணி மு
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.
-
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி
-
இஸ்ரேலுக்கு அணுகுண்டு மிரட்டல் விடுத்த ஈரான்
12 May 2024டெக்ரான் : இஸ்ரேலுக்கு ஈரான் அணுகுண்டு தாக்குதல் மிரட்டல் விடுத்து உள்ளது.