முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாரதா இண்டர்நேஷனல் பள்ளியில் மாணவர்களுக்கான யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது

செவ்வாய்க்கிழமை, 2 மே 2017      ஈரோடு
Image Unavailable

சாரதா இண்டர்நேஷனல் பள்ளியில் மாணவர்களுக்கான யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது

யோகா கருத்தரங்கு

யூத் எம்பவர்மெண்ட் மற்றும் வாழும் கலை பயிற்சி சார்பாக சாரதா இண்டர்நேஷனல் பள்ளியில் யோகா கருத்தரங்கு நடைபெற்றது. இதில் யோகாவினால் நம் வாழ்வில் நினைவாற்றலை வளர்த்துக்கொள்ளவும் மனதை ஒருநிலைப்படுத்தும் திறன் மற்றும் நாம் நோயின்றி வாழவும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும் யோகா மிகவும் முக்கியம் என்பதை மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தனர்.

வாழும்கலை யோகா மாணவர்களுக்கான வகுப்பினை ஆசிரியர் சசிகுமார் ஜி மற்றும் ஆசிரியை பூரணி  கலந்து கொண்டு விளையாட்டு முறையில் குழந்தைகளிடையே ஆர்வத்தைத் தூண்டி எளிமையான முறையில் பயிற்சிகளைப் பயிற்றுவித்தனர். ஒரு வாரமாக நடைபெற்ற யோகா வகுப்பின் மூலம் குழந்தைகளிடையே ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டுவந்தது.

இறுதி நாளன்று சிறப்பு விருந்தினராக பள்ளியின் செயலர் சீதாலட்சுமி இராமகிருஷ்ணன் கலந்து கொண்டு குழந்தைகளையும்  பயிற்றுனரையும் வாழ்த்தி பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்