எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஊட்டி காந்தல் குருசடி திருத்தலத்தில் 84_வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது.
சிறப்பு திருப்பலி
தென்னத்தில் கல்வாரி என்றழைக்கப்படும் ஊட்டி, காந்தல் பகுதியில் அமைந்துள்ள குருசடி ஏசு திருத்தலத்தில் ஆண்டுதோறும் மே மாதம் 3_ந் தேதி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினமும் சிறப்பு திருப்பலிகள் நடத்தப்பட்டு வந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் மறைமாவட்ட ஆயர் அமல்ராஜ் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலியை நடத்தி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பங்குத்தந்தை பீட்டர், முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் மற்றும் 20 குருக்கள் கலந்து கொண்டு திருப்பலியை நிறைவேற்றினர்.
பல்லாயிரக்கணக்கானோர்
இயேசு கிறிஸ்து சுமந்த சிலுவையின் ஒரு பகுதி இத்திருத்தலத்தில் இருப்பதால் ஆண்டுதோறும் இவ்விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் உட்பட கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். அதேபோன்று இந்தாண்டும் இத்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர். விழாவின் ஒரு பகுதியாக மாலை 5 மணிக்கு திருத்தேர் ஊர்வலம் நடைபெற்றது. திருத்தலத்திலிருந்து துவங்கிய ஊர்வலம், குருசடி காலனி, முக்கோணம் வழியாக பென்னட் மார்க்கெட் வரை சென்று மீண்டும் திருத்தலத்தை இரவு 8 மணிக்கு அடைந்தது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் குருசடி திருத்தல பங்குத்தந்தை பீட்டர் செய்திருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |