எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சியை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில், கலெக்டர் டி.பி.ராஜேஷ், முன்னிலையில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்கள்.
நலத்திட்ட உதவிகள்
இவ்விழாவில் தொழில்துறை அமைச்சர் மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் , மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பாக 2 பயனாளிகளுக்கு ரூ.6,710- மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரங்களையும், 2 பயனாளிகளுக்கு ரூ.9,120- மதிப்பிலான சலவைப்பெட்டிகளையும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக 4 பயனாளிகளுக்கு ரூ.16000- மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரங்களையும், 6 சட்டப்பட்டதாரிகளுக்கு ரூ.3 இலட்சம் மதிப்பிலான ஊக்குவிப்பு தொகைகளையும், மார்ச்-2016 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் இரண்டாமிடம் பெற்ற ஒரு மாணவருக்கு ரூ.20000-க்கான ரொக்கப்பரிசினையும், மீன்வளத்துறை சார்பாக ரூ.2,41,000- மதிப்பில் 10 மீனவர்களுக்கு மானியத்துடன் 7எச்பி குதிரை திறன் கொண்ட படகுக்கான மோட்டார்களையும், 2015-16ம் கல்வியாண்டில் நடைபெற்ற 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 14 மீனவ மாணவ மாணவியர்களுக்கு ரொக்கப்பரிசுகளையும், புதுவாழ்வு திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.2,70,000- மதிப்பிலான அம்மா ஆட்டோவினையும், விளையாட்டுத்துறை சார்பாக 15 பயனாளிகளுக்கு ஓடி விளையாடு பாப்பா திட்டத்தின் கீழ் ரூ.7,50,000- மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களையும், தோட்டக்கலைத்துறை சார்பாக 1 பயனாளிக்கு ரூ.3,20,000- (அரசு மானியம் ரூ.75,000-) மதிப்பிலான மினி டிராக்டரையும், வேளாண்மைத்துறை சார்பாக 20 பயனாளிகளுக்கு ரூ.21,343- மதிப்பிலான இடுபொருடகளையும், வருவாய்த்துறை சார்பாக 11 பயனாளிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1000- வழங்கக்கூடிய விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளையும், மாவட்ட வழங்கல் துறை சார்பாக 25 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த 5 காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாணவர்களுக்கு ரூ.92,000- மதிப்பிலான ரொக்கப்பரிசுகளையும் என 97 பயனாளிகளுக்கு ரூ.18,12,173- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.இவ்விழாவில் கலெக்டர் டி.பி.ராஜேஷ், வரவேற்புரையாற்றினார். செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) உல.இரவீந்திரன் நன்றியுரையாற்றினார். இப்பொருட்காட்சியானது 45 நாட்கள் நடைபெறும். இப்பொருட்காட்சியில் நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15-ம் சிறுவர்களுக்கு ரூ.10-ம், மாணவ மாணவியர்களுக்கு ரூ.5.-மாக வசூலிக்கப்படுகிறது. இவ்விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பேசியதாவது,
அமைச்சர் பேச்சு
கடலூர் நகருக்கு எவ்வளவு சிறப்புகள் இருந்தாலும் கூட ஆங்கிலேயர்கள் நமது நாட்டை ஆட்சி செய்தபோது கடலூர் கோட்டையை மையப்படுத்தி இங்கே தலைநகராக கொண்டுதான் இராஜ்யத்தை ஆண்ட வரலாறு கடலூருக்கு உண்டு. அந்த நேரத்தில்தான் ஆங்கிலேயர்களால் கடலூர் துறைமுகம் நாட்டிலேயே சிறந்த துறைமுகமாக உருவாக்கப்பட்டது. அவ்வளவு சிறப்புமிக்க கடலூரிலே இன்று அரசுப் பொருட்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2011-16 வரை நடைபெற்ற அம்மா அவர்களின் தலைமையிலான நல்லாட்சியில் பொற்கால முதல்வராக இருந்து தேர்தல் அறிக்கையில் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியதன் பயனாக மக்களை மட்டுமே நம்பி தன்னந்தனியாக தேர்தலை சந்தித்து 32 ஆண்டுகளுக்கு பிறகு புதிய சகாப்தம் படைத்து வெற்றிப்பெற்று மீண்டும் அம்மா முதல்வராகி சாதனை படைத்தார்கள்.
தொடரும் அம்மாவின் அரசு
கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு கூடிய கடைசி சட்டமன்ற கூட்டத்தொடரில் அம்மா கடந்த ஐந்தாண்டுகளில் தேர்தல் வாக்குறுதிகளை அனைத்தையும் நிறைவேற்றியுள்ளேன், சொல்லாத திட்டங்களையும் தந்துள்ளேன், மீண்டும் சட்டமன்றம் கூடும்போது நான் தமிழக மக்களால் முதலமைச்சராக வெற்றிப்பெற்று இங்கு வருவேன், இந்த ஆட்சியே தொடரும் என்று சொல்லி தேர்தலை சந்தித்தார்கள். இதற்கு அம்மா அவர்களிடம் இருந்த தன்னம்பிக்கை மற்றும் தையரித்தால்தான் மீண்டும் வெற்றிப்பெற்று வரலாறு படைத்தார்கள். மேலும் அக்கூட்டத்தில் அம்மா நான் இருக்கும்வரையிலும் எனக்கு பிறகும் இந்த ஆட்சியே தமிழகத்தில் இனி தொடர்ந்து நடைபெறும் என்று சொன்னார்கள். அவர்களின் வாக்கு மெய்பிக்கப்படும் வகையில் அம்மாவின் அரசு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
5 திட்டங்களுக்கு கையெழுத்து
அம்மா தேர்தலில் வெற்றிப்பெற்று பதவியேற்று தேர்தல் அறிக்கையில் அறிவித்த ஐந்து திட்டங்களுக்கு பதவியேற்ற அன்றே கையொப்பமிட்டு செயல்படுத்தி வந்தார்கள். அதேபோல் தற்போதைய தமிழக முதலமைச்சர் அவர்களும் அம்மா அவர்களின் வழியில் பதவியேற்ற அன்றே ஐந்து திட்டங்களுக்கு கையெழுத்திட்டு செயல்படுத்தி வருகிறார்கள். அம்மா தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் தொடங்கப்படும் என்று சொன்னார்கள். அதன்படி தமிழகத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தை தொடங்கி நடைமுறைப்படுத்தி வந்தார்கள். மேலும், அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு மத்திய அரசு மூலமாக டிஜிட்டல் உரிமையை பெற்று தருவேன் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லி இருந்தார்கள். இன்று அம்மா அவர்களின் இலட்சியம் மற்றும் கனவு நிறைவேறும் வகையில் அரசு மத்திய அரசு மூலம் இந்திய துணை கண்டத்திலேயே தமிழ்நாட்டில்தான் அரசு கேபிள் டிவி நிறுவனம் டிஜிட்டல் உரிமம் பெற்றுள்ளது. இதன் மூலம் இந்த அரசு அம்மாவின் அரசு என்பதை நிருபித்து நல்லாட்சி நடத்தி வருகிறது என்பதை இங்கு பெருமையோடு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.இவ்வாறாக அரசு துறைதோறும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் அனைத்தும் நாட்டு மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஒவ்வொரு நகரங்களிலும் பொருட்காட்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று கடலூரில் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பொழுதுபோக்கு அம்சத்தை நிறைவேற்றுவதோடு மட்டுமல்லாமல் அரசின் திட்டங்கள் என்னென்ன மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்பதை அறிகின்ற ஒரு மகத்தான சாதனமாக இந்த பொருட்காட்சி விளங்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-09-2025.
17 Sep 2025 -
கொடிக்கம்பம் அகற்றும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
17 Sep 2025சென்னை, கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Sep 2025சென்னை, தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் 21 மாவட்டங்களில் இன்று (செப்.18-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
சற்று குறைந்த தங்கம் விலை
17 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையானது.
-
தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: மீண்டும் ஒரு உரிமைப் போரை நடத்தி நாட்டை பாதுகாப்போம் கரூர் தி.மு.க. முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
17 Sep 2025கரூர்: தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று தெரிவித்துள்ள தி.மு.க.
-
மயிலாடுதுறை ஆணவக்கொலை: பெண்ணின் தாய் உள்ளிட்ட 4 பேர் சிறையில் அடைப்பு
17 Sep 2025மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஆணவக் கொலை வழக்கில் பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு சாபக்கேடு: சித்தராமையா பேச்சு
17 Sep 2025பெங்களூரு, யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: அமித்ஷாவிடம் இ.பி.எஸ். நேரில் வலியுறுத்தல்
17 Sep 2025சென்னை, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம்: டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
17 Sep 2025புதுடெல்லி, வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம் என்று டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்கருத்து தெரிவித்துள்ளது.
-
அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது: துணை பிரதமர்
17 Sep 2025தோஹா: இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது என்றும் இருதரப்பு விவகாரங்களில் 3-ம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்க பாகிஸ்தான் தயார் என்றும்
-
இனி விருப்ப ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு
17 Sep 2025புதுடெல்லி, 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
17 Sep 2025சென்னை, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
75-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் வாழ்த்து
17 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பி்றந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
-
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
17 Sep 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 8,641 கன அடியாகக் குறைந்தது.
-
பிரதமர் மோடி பிறந்த நாளில் 12 ஆண்டுகளாக இலவச டீ வழங்கும் வியாபாரி..!
17 Sep 2025சென்னை, பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக டீயை வியாபாரி வழங்கினார்.
-
பெரியார் 147-வது பிறந்தநாள்: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
17 Sep 2025சென்னை, பெரியாரின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
-
பிரதமர் நரேந்திரமோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
17 Sep 2025ரோம், பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? ரஜினி அதிரடி பதில்
17 Sep 2025சென்னை: திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்ற கேள்விக்கு நடிகர் ரஜினி பதில் அளித்துள்ளார்.
-
2025-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.22.08 லட்சம் கோடியாக அதிகரிப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா தகவல்
17 Sep 2025அமராவதி, ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும் என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி.
-
திருப்பதி பிரம்மோற்சவ விழா: பாதுகாப்பு பணிக்கு 4,200 போலீசார் குவிப்பு
17 Sep 2025திருப்பதி, திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 4,200 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி அரசு முடிவு
17 Sep 2025டெல்லி: எந்தவித தூண்டுதலும் இல்லாமல் மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
-
இந்திய தயாரிப்பு பொருட்களை மட்டும் மக்கள் வாங்க வேண்டும்: பிரதமர் நரேந்திரமோடி கோரிக்கை
17 Sep 2025போபால், நீங்கள் வாங்கும் எந்தவொரு பொருளும் இந்திய தயாரிப்பு பொருளாக இருக்க வேண்டும் என 140 கோடி இந்தியர்களிடமும் பிரதமர் மோடி வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
-
தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவு பேரொளி பெரியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
17 Sep 2025சென்னை, தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார் என அவரது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு
17 Sep 2025சென்னை: விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
அறிவுச்சூரியன் தந்தை பெரியார்: துணை முதல்வர் உதயநிதி புகழாரம்
17 Sep 2025சென்னை: உலகம் முழுவதற்குமான கொள்கைகளை வகுத்தளித்த அறிவுச்சூரியன் தந்தை பெரியார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.