முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சார்பில் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்கள் : கலெக்டர் டாக்டர். பழனிசாமி தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 7 மே 2017      திருச்சி

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சார்பில் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்கள் நிறுவியுள்ளது. பொதுமக்கள் ஆதார் அட்டையில் குறிப்பிட்டுள்ள விவரங்களை இம்மையங்களுக்கு சென்று திருத்தம் செய்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. தெரிவித்துள்ளார்.

நிரந்தர ஆதார் சேர்க்கை

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டையில் திருத்தங்கள் ஏதும் செய்ய விரும்பினால், இம்மையங்களுக்குச் சென்று கைரேகை அல்லது கருவிழியினைப் பதிவு செய்து தங்களது பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை திருத்தம் செய்து கொள்ளலாம். மேலும், புகைப்படம், கைவிரல் ரேகை, மற்றும் கருவிழி ஆகியவற்றையும் புதுப்பித்துக்கொள்ளலாம்.

ஆதார் பதிவு செய்வதற்கும், 5 மற்றும் 15 வயது முடிந்தவர்களுக்கான கட்டாய கைவிரல் ரேகை மறுபதிவு செய்வதற்கும் எந்தவித சேவை கட்டணம் செலுத்த தேவையில்லை. நிலைப்புள்ளி விவரங்களையும் (பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி), புகைப்படம், கைவிரல் ரேகை, கருவிழி புதுப்பிக்கவும் ரூபாய் 25 செலுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம். ஆதார் விவரங்களை தாளில் அச்சிட்டு பெற்றுக்கொள்வதற்கும் ரூபாய் 10 செலுத்தி திருத்தம் செய்து கொள்ளலாம்.

நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் படிவங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. மேலும், பொதுமக்கள் தவறாமல் ஒப்புகைச் சீட்டை மையத்தில் பணிபுரியும் தரவு உள்ளீட்டாளரிடமிருந்து கேட்டு பெற்றுக கொள்ளலாம். சேவை தொடர்பாக புகார் தொவிக்க 18004 252911 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்